பிஎஸ்என்எல் அறிவித்துள்ள அட்காசமான ப்ரீபெய்ட் ஆபர்.!
பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பேக் ரூ.666க்கு ரீசார்ஜ் செய்தால் தற்போது 120ஜிபி டேட்டாவை பெறமுடியும்.!
பிஎஸ்என்எல் பொறுத்தமட்டில் தற்போது ஜியோவுக்கு எதிராக புதிய ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது, இந்த ஆபர் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கின்றது. ஜியோ நிறுவனம் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் இனைந்து அதிக டேட்டா ஆபரை அறிவித்த வண்ணம் உள்ளது.
பிஎஸ்என்எல் இன்டர்நெட் வேகம் சற்று குறைவாகதான் உள்ளது என பல்வேறு பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர், இருந்தபோதிலும் அந்நிறுவனம் தற்போது கூடுதலாக டேட்டா ஆபரை அறிவித்துள்ளது.

ப்ரீபெய்ட் :
பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பேக் ரூ.666க்கு ரீசார்ஜ் செய்தால் தற்போது 120ஜிபி டேட்டாவை பெறமுடியும், அதன்பின் இந்தடேட்டா 60நாட்களுக்கு பயன்படும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் தினசரி 2ஜிபி டேட்டா அளவை பெறமுடியும்.

பிஎஸ்என்எல் திட்டம்:
பிஎஸ்என்எல் இந்த திட்டம் பொறுத்தமட்டில் பல நன்மைகள் உள்ளது, இந்த திட்டத்தின்கீழ் வரம்பற்ற கால் அழைப்புமற்றும் குறிப்பிட்ட டேட்டாவை வழங்குகிறது இந்நிறுவனம்.

இன்டர்நெட் வேகம்:
பிஎஸ்என்எல் இன்டர்நெட் வேகம் பொறுத்தமட்டில் சற்று குறைவாகதான் உள்ளது, குறிப்பிட்ட வீடியோ மற்றும் கோப்புகளை டவுன்லோடு செய்வதில் பல சிக்கல் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ:
ரிலையன்ஸ் ஜியோ தற்போது பல்வேறு டேட்டா சலுகைகளை வழங்கியுள்ளது, மேலும் இதன் இன்டர்நெட் வேகம் சற்று அதிகமாக தற்போது, அதிகவாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.


Click it and Unblock the Notifications