Home
News

Jio, Airtel, Vi இன் 5ஜி சேவை இந்தியாவில் எப்போது அறிமுகம்? எதிர்பார்ப்பு இன்னும் தள்ளி போகிறதா?

இந்தியா இன்னும் 5ஜி சேவையின் ஆற்றலைப் பார்க்கவில்லை. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vi) உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5G சோதனைகளை நடத்தி வருகின்றது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G சோதனையுடன் வெகுதூரம் வந்துவிட்டாலும், அவர்கள் அதை முடிக்கக்கூடிய கட்டத்தில் இன்னும் இல்லை என்பதே உண்மையாக இருக்கிறது. சமீபத்திய தகவலின் படி, முன்பு எதிர்பார்க்கப்பட்ட காலத்தில் இருந்து இதன் அறிமுகம் இன்னும் பின்னோக்கி சென்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Jio, Airtel, Vi இன் 5ஜி சேவை இந்தியாவில் எப்போது அறிமுகம்?

Jio, Airtel, Vi இன் 5ஜி சேவை இந்தியாவில் எப்போது அறிமுகம்?

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நவம்பர் 2021ஆண்டிற்குள் 5G சோதனைகளை முடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் பொருள் இந்தியாவில் 5G ஸ்பெக்ட்ரமிற்கான ஏலம் வரும் 2022 ஆண்டின் முதல் காலாண்டில் நடத்தப்படலாம் என்று யூகிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அவர்களின் 5G தொழில்நுட்பத்தைச் சோதிக்கக் கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது. 5G சோதனைக்காகத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு DoT மேலும் ஆறு மாதங்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.

இந்திய 5G வெளியீட்டில் தாமதம் ஏற்படுமா? உண்மை என்ன?

இந்திய 5G வெளியீட்டில் தாமதம் ஏற்படுமா? உண்மை என்ன?

நீட்டிக்கப்பட்ட சோதனைக் கட்டத்துடன், ஸ்பெக்ட்ரம் ஏலங்கள் இன்னும் பின் நோக்கித் தள்ளப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது, 5G வெளியீட்டில் தாமதம் ஏற்படும். 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவிற்கு 5G இன் சேவையை வழங்குவதே திட்டமாக இருந்தது. முன்னதாக அது சாத்தியமில்லை என்று தோன்றினாலும், அது நடக்காது என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் 5G சோதனைகளைக் குறைந்தபட்சம் 2022 முதல் காலாண்டில் தொடரும் என்பதால், ஸ்பெக்ட்ரம் ஏலத்தை முன்னோக்கித் தள்ள வேண்டும்.

5G அலைக்கற்றைக்கான புதிய விலையை TRAI பரிந்துரைக்கிறதா?

5G அலைக்கற்றைக்கான புதிய விலையை TRAI பரிந்துரைக்கிறதா?

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இன்னும் 5G ஸ்பெக்ட்ரம் புதிய அடிப்படை விலை கொண்டு வரவில்லை. மற்றொரு சமீபத்திய டெலிகாம் அறிக்கையின்படி, பிப்ரவரி அல்லது மார்ச் 2022 ஆண்டின் இறுதிக்குள் 5G அலைக்கற்றைக்கான புதிய விலையை TRAI பரிந்துரைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால், இயற்கையாகவே, ஸ்பெக்ட்ரம் ஏலம் அடுத்த மாதங்களில் மட்டுமே நடக்கும். 2023 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இது நடந்தால், 2022 இன் இரண்டாம் பாதியில் இந்தியா 5G சேவையைப் பார்க்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்குகள் யாருக்கெல்லாம் பயனளிக்கும்?

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்குகள் யாருக்கெல்லாம் பயனளிக்கும்?

இருப்பினும், இந்த அனுமானம் கூட ஒரு பெரிய 'கேள்விக்குறியுடன்' வருகிறது. மேலும் தாமதங்கள் ஏற்பட்டால், இந்தியா 2023 ஆம் ஆண்டில் அதன் 5G நெட்வொர்க்குகளை மட்டுமே அறிமுகப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. அதுவரை, நுகர்வோர் 4ஜி நெட்வொர்க்குகளுடன் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். உண்மையில், 5G நெட்வொர்க்குகள் வந்த பிறகும் கூட, அதன் பயன்பாட்டு வழக்குகள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பெரிதும் பயனளிக்கும் என்று கூறுகின்றது. சராசரியாக வருவதற்கு அதிக நேரம் எடுக்கும், அல்லது சாதாரண நுகர்வோருக்கு 5G மிகவும் தேவைப்படும் என்பதை இது குறிக்கிறது.

5ஜி அறிமுகத்தின் தாமதங்கள் உண்மையில் மோசமானவை அல்ல

5ஜி அறிமுகத்தின் தாமதங்கள் உண்மையில் மோசமானவை அல்ல

பின்னோக்கிப் பார்த்தால், தாமதங்கள் உண்மையில் மோசமானவை அல்ல. இதனால் ஏற்படும் தாமதங்களால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிறையப் பயனடைகின்றன. இது இந்தியச் சந்தைக்குச் சிறந்த மற்றும் மலிவு விலையில் 5G ஸ்மார்ட்போன் விருப்பங்களுடன் சேவையைத் தொடங்குவதற்கான நேரத்தை வழங்குகிறது. இதன் பொருள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G நெட்வொர்க் சேவைகளைத் தொடங்கும் போதெல்லாம், அவர்களுக்குச் சேவை செய்ய அதிக வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள்.

5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் உண்மையான அவசரம் இப்போதைக்குத் தேவையில்லையா?

5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் உண்மையான அவசரம் இப்போதைக்குத் தேவையில்லையா?

இது தொழில்துறையினர் மனதில் ஏற்கனவே உள்ள ஒன்று தான் என்றாலும் கூட, இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் உண்மையான அவசரம் இப்போதைக்குத் தேவையில்லை என்பதே நிஜம். ரிலையன்ஸ் ஜியோ , பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 5ஜி சோதனைக்கு வரும்போது ஏற்கனவே பெரிய முன்னேற்றங்களைச் செய்துள்ளன. குறிப்பாக, வோடபோன் ஐடியா 5G சோதனையில் மாபெரும் முன்னேற்றங்களைச் செய்து வருகிறது. தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாட்டு நிகழ்வுகளை ஆராய முயல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

4G சேவைகளே இன்னும் இந்தியாவில் முழுமையாக மேம்படுத்தப்படாத போது 5ஜி மேம்படுத்தல் அவசியமா?

4G சேவைகளே இன்னும் இந்தியாவில் முழுமையாக மேம்படுத்தப்படாத போது 5ஜி மேம்படுத்தல் அவசியமா?

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்த தலைமுறை நெட்வொர்க் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கும், பொருத்தமான பயன்பாட்டு நிகழ்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும் எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறதோ, அவ்வளவு சிறப்பாக 5G சேவைகளை இந்தியா தொடங்கும் போது அது சிறப்பாக இருக்கும். 4G சேவைகளை மேம்படுத்தத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிறைய இடங்கள் இருப்பதால், 5G இன் உண்மையான தேவை இப்போதைக்கு இந்தியாவில் தேவையில்லை என்பதே பலதரப்பற்றவரின் கருத்தாக இருக்கிறது.

இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது வாங்குவது சிறந்ததா?

இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் இப்போது வாங்குவது சிறந்ததா?

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இப்போதே ஏராளமான புதிய ஸ்மார்ட்போன் மாடல்களில், 5ஜி சேவை ஆதரவுடன் வெளிவரத் துவங்கிவிட்டன. ஏராளமான இந்தியர்கள் இப்போதே 5ஜி இணக்கத்துடன் கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வாங்க தூங்கிவிட்டனர். 5ஜி சேவை இல்லாத போது, மக்கள் 5ஜி சாதனங்களை வாங்குவது சரி தானா? எந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவது இந்தியாவில் சிறந்ததாக இருக்கும் என்பதை பற்றி அறிந்துகொள்ள இந்த பதிவின் மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை படியுங்கள். தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் தொடர்பான சுவாரசியமான தகவல்களுக்கு எங்கள் கிஸ்பாட் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Jio Airtel And Vi Expected Time Period For 5G Rollout May Get Delayed In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X