சென்னை : ஐ.டி நிறுவனங்கள் விடுமுறை (புகைப்படங்கள்)..!
வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் உள்ள முக்கியமான ஐ.டி நிறுவனங்கள் தற்காலிகமாக விடுமுறை அறிவித்துள்ளன. விடுமுறை அறிவித்துள்ள ஐ.டி நிறுவனங்களில் டிசிஎஸ் (TCS), விப்ரோ (Wipro) ஆகியவைகளும் அடங்கும்.

ஐபிஎம், காக்னிஸென்ட், இன்ஃப்போஸிஸ் மற்றும் சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேறு இடங்களில் உள்ள அலுவகங்களுக்கு இடம் பெயர்ந்து வேலைகளை தொடர செய்து கொண்டிருக்க, மறுபக்கம் ஊழியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி சில ஐ.டி நிறுவனங்கள் தற்காலிக விடுமுறையை அறிவித்துள்ளன.

மேலும் சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) வசதியை வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விப்ரோ வளாகத்தில் வெள்ள நீர் சூழ விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் சாதாரண நாட்களை போலவே வேலைகளை கவனிக்க முயற்சிக்கின்றனர்.

அலுவலகத்துள் வெள்ள நீர் புகுந்துள்ள காட்சி.

படகுகள் வைத்து தான் ஊழியர்கள் வளாகத்தில் பயணிக்கப்படுகின்றனர்.

ஓய்வு எடுப்பதற்கான எந்த விதமான இடமும் வளாகாங்களில் இல்லை.

பெரும்பாலான தரை தளங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications