Home
News

நிலவை தாண்டி சூரியனை தொட துடிக்கும் ISRO.. சந்திரயான்-3க்கு பிறகு இஸ்ரோவின் திட்டம் இது தானா?

இஸ்ரோ (ISRO) இன்று மாலை 6 மணி அளவில் அதன் சந்திரயான்-3 (Chandrayaan-3) விண்கலத்தை விக்ரம் லேண்டர் (Vikram Lander) மற்றும் பிரக்யான் ரோவர் (Pragyaan Rover) உடன் நிலவில் தரையிறக்கவுள்ளது. இந்த நிகழ்வை இஸ்ரோ இன்று நேரலை செய்கிறது.

இது இஸ்ரோவின் கனவு திட்டம் தான் என்றாலும் கூட, இஸ்ரோ இன்னும் பல திட்டங்களில் சைலெண்டாக வேலை செய்கிறது. இதில் சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஒரு திட்டமும், பூமியின் காலநிலை மாற்றத்தை கண்காணிக்க உதவும் ஒரு திட்டமும், மனிதனை நிலவுக்கு அனுப்பும் ஒரு திட்டமும் அடங்கியுள்ளது.

நிலவை தாண்டி சூரியனை தொட துடிக்கும் ISRO.. சந்திரயான்-3க்கு பிறகு என்ன

சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமாக நிறைவடையவுள்ள நிலையில், இஸ்ரோ அடுத்த மாதம் சூரியனை நோக்கி ஒரு ராக்கெட்டை ஏவவுள்ளது. சூரியனைப் பற்றிய ஆய்வு மற்றும் காலநிலை கண்காணிப்பிற்காக இஸ்ரோ விரைவில் செயற்கைக்கோளை ஏவவுள்ளது. ககன்யான் (Gaganyaan) மனித விண்வெளி விமானத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு சோதனை வாகனம் மற்றும் ஒரு இந்திய-அமெரிக்க செயற்கை துளை ரேடாரை அனுப்பவுள்ளது.

சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான இந்திய ஆய்வகமான ஆதித்யா-எல்1 (Aditya-L1) ஏவுவதற்கு தயாராகி வருகிறது. பெரும்பாலும் செப்டம்பர் முதல் வாரத்தில் இது ஏவுதலுக்கு தயார் ஆகுமென்று கூறப்படுகிறது. இஸ்ரோ தலைவர் சோமநாத் எஸ் (Somanath S) கூறிய கருத்துப்படி, காலநிலை கண்காணிப்பு செயற்கைக்கோளான இன்சாட்-3டிஎஸ் (INSAT-3DS) ஐ விண்வெளி நிறுவனம் ஏவுவதற்கும் ஏற்பாடு செய்து தயார்நிலையில் வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்திய நாட்டின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யானுக்கான பணியாளர்கள் தப்பிக்கும் அமைப்பைச் சரிபார்ப்பதற்காக, சோதனை வாகனப் பயணத்தின் துவக்கமும் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ISRO அதிகாரிகளின் கூற்றுப்படி, NASA-ISRO SAR (NISAR) என்பது அமெரிக்க விண்வெளி நிறுவனமான NASA மற்றும் ISRO ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட ஒரு குறைந்த புவி சுற்றுப்பாதை (LEO) கண்காணிப்பு சாட்டிலைட் ஆகும்.

நிலவை தாண்டி சூரியனை தொட துடிக்கும் ISRO.. சந்திரயான்-3க்கு பிறகு என்ன

NISAR ஆனது 12 நாட்களில் உலகம் முழுவதையும் வரைபடமாக்கி, பூமியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், பனிக்கட்டி, தாவர உயிரி, கடல் மட்ட உயர்வு, நிலத்தடி நீர் மற்றும் பூகம்பங்கள், சுனாமிகள், எரிமலைகள், நிலச்சரிவுகள் உள்ளிட்ட இயற்கை அபாயங்கள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்வதற்கான இடஞ்சார்ந்த மற்றும் தற்காலிகமான நிலையான தரவுகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

ககன்யான் மனித விண்வெளி (மனிதன்) பயணத்தை மேற்கொள்வதற்கு முன், இஸ்ரோ இரண்டு ஆளில்லா பயணங்களைத் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் முதல் ஆளில்லா குழு தொகுதி பணியை இஸ்ரோ நடத்தும். ககன்யான் பணியின் நோக்கம், இந்திய ஏவுகணை வாகனத்தில் LEO-க்கு மனித விண்வெளி விமான பயணத்தை நடத்தும் திறனை நிரூபிப்பதாகும். இது ஒரு சுற்றுப்பாதை தொகுதி, ஒரு குழு தொகுதி மற்றும் ஒரு சேவை தொகுதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

நிலவை தாண்டி சூரியனை தொட துடிக்கும் ISRO.. சந்திரயான்-3க்கு பிறகு என்ன

இதில் ஒரு க்ரூ மாட்யூல், ஒரு பிரஷரைஸ்டு மாட்யூல் உள்ளது. இது குழுவினரின் தங்குமிடமாக செயல்படுகிறது. சுற்றுப்பாதை தொகுதி ஒன்று முதல் 3 நாட்களுக்கு பூமியை சுற்றி சுமார் 400 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இதன் குழு தொகுதி கடலில் நியமிக்கப்பட்ட இடத்திற்கு திரும்பும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். இஸ்ரோ இதேபோல், இன்னும் பல விண்வெளி திட்டங்களை திட்டமிட்டு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ISRO's Sun Mission Aditya L1 and Climate Satellite Launch Scheduled After Chandrayaan-3 Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X