ISRO மரண மாஸ்.. சந்திரயான்-4 இல் டபுள் ராக்கெட்.. வரலாற்றில் முதல் முறை.. ஒரே திட்டத்தில் 2 ராக்கெட்..
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரே திட்டத்தில் 2 ராக்கெட்களை அனுப்ப இஸ்ரோ (ISRO) விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளது. இந்த 2 ராக்கெட்கள், விரைவில் விண்ணில் பாயவுள்ள சந்திராயன்-4 (Chandrayaan-4) திட்டத்திற்காக நிலவு நோக்கி அனுப்பப்படவுள்ளது.
சந்திரயான்-4 (Chandrayaan-4): சந்திரயான்-3 (Chandrayaan-3) திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான (ISRO) சந்திரயான்-4 (Chandrayaan-4) திட்டத்தை விரைந்து நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற, இஸ்ரோ இந்த முறை 2 தனித்தனி ராக்கெட்களை (rocket) ஒரே திட்டத்திற்காக பயன்படுத்தவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆம், இந்தியாவின் நான்காவது நிலவு மிஷன் (India's 4th moon mission) 2 ராக்கெட்களை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சந்திரயான்-4 திட்டத்தில் 5 பெலோட்களா? அதேபோல், இந்த 4வது மூன் மிஷனில் 5 பெலோட்களை இஸ்ரோ பயன்படுத்தவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தெரியாதவர்களுக்கு, கடந்த சந்திரயான்-3 மிஷனில் இஸ்ரோ 3 பெலோட்களை பயன்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சந்திரயான்-4 திட்டத்தின் நோக்கம் மிகவும் பெரியது என்பதனால், இஸ்ரோ இந்த முறை 5 பெலோட்களை அனுப்பவுள்ளது.
சந்திராயன்-4 திட்டம்: மிகவும் பெரிய நோக்கத்தை கொண்டுள்ளது. சந்திரயான்-4 திட்டம் நிலவில் தரையிறங்கி அங்குள்ள நிலவின் பாறைகள் மற்றும் நிலவின் ரெகோலித் மண்ணை எடுத்துக்கொண்டு மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பும் நோக்கத்தை கொண்டுள்ளது. ஆகையால், சந்திரயான்-4 திட்டத்தை வெற்றியடைய செய்ய இஸ்ரோ இந்த முறை 5 பெலோட்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
என்னென்ன மாட்யூல் இடம்பெறும்: இந்த சந்திரயான்-4 பணியானது மொத்தம் ஐந்து விண்கலத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவை ப்ரோபல்ஷன் மாட்யூல் (propulsion module) என்றழைக்கப்படும் உந்துவிசை தொகுதி, டிசெண்டர் மாட்யூல் (descender module) என்றழைக்கப்பட்டும் இறங்கு தொகுதி, அஸ்ஸெண்டர் மாட்யூல் என்ற (ascender module) ஏறுவரிசை தொகுதி, டிரான்ஸ்பர் மாட்யூல் (transfer module) பரிமாற்ற தொகுதி மற்றும் ரீ-என்ட்ரி மாட்யூல் (re-entry module) மறு நுழைவு தொகுதிகளை கொண்டிருக்கும்.
சந்திரயான்-4 இல் இடம்பெறும் ராக்கெட் பெயர்: இந்த 5 பெலோட் தொகுதிகளும் 2 சந்திரயான்-4 ராக்கெட் உடன் எடுத்துச்செல்லப்படும். நான்கு டன் பேலோட் லிஃப்டர் LVM-3 ராக்கெட் மூன்று தொகுதிக் கூறுகளைக் கொண்டு செல்லும். இதில் உந்துவிசை, இறங்கு மற்றும் ஏறுவரிசை தொகுதிகள் இடம்பெறும். அதேபோல், 2வது PSLV ராக்கெட்டில் பரிமாற்ற மற்றும் மறு நுழைவு தொகுதிகளை இஸ்ரோ அனுப்பவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

40 நாள் பயணம்: இரண்டு ராக்கெட்டுகளும் வெவ்வேறு நேர இடைவெளியில் இந்தியாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். இதில் ஒரு ராக்கெட் நீண்ட பூமி சுற்றுப்பாதை சூழ்ச்சி பாதையை எடுத்து செல்லும். இது சந்திரனின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி சுமார் 40 நாட்களில் சந்திர சுற்றுப்பாதைக்கு பயணித்து எரிபொருள் செலவைக் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நேராக நிலவுக்கு பாயும் 2ம் ராக்கெட்: அதேபோல், மற்றொன்று ராக்கெட் எரிபொருளை எரிப்பதன் மூலம் ரஷ்யாவின் லூனா-25 செய்தது போல் இந்த ராக்கெட் சந்திர சுற்றுப்பாதைக்கு நேராக பயணிக்க போகிறது. இருப்பினும், இந்த ஏவுதல்களின் சரியான வரிசை மற்றும் சிறந்த விவரங்கள் இஸ்ரோவால் வெளியிடப்படவில்லை. சந்திரயான்-3 இன் விக்ரம் லேண்டரைப் போலவே, சந்திராயன்-4 இன் இறங்குதளம் சந்திரனில் தரையிறங்கும்.
பூமிக்கு வரும் நிலவு பாறை மற்றும் மண்ணை: இந்தியாவின் நண்பகல் பயணத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட அசெண்டர் தொகுதி, சந்திர மேற்பரப்பில் இருந்து மூன் ராக் மற்றும் ரெகோலித் மண் மாதிரிகளை சேகரித்து சேமித்து வைக்கும். சந்திரனில் இருந்து புறப்பட்டு சந்திர சுற்றுப்பாதையை அடையும், அங்கு பரிமாற்ற தொகுதி, பரிமாற்ற சுற்றுப்பாதையை அடையும். ஏறுவரிசைத் தொகுதியைப் பிடித்து, அதிலிருந்து சந்திர மாதிரிகளைச் சேகரித்து, பின்னர் பூமியின் சுற்றுப்பாதைக்கு மாதிரிகளை எடுத்துச் செல்லும்.
சந்திரயான்-4 எப்போது விண்ணில் பாயும்? மறு நுழைவு தொகுதி பூமியில் நிலவின் மாதிரிகளுடன் பாதுகாப்பாக தரையிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சந்திரயான்-4 திட்டத்தை இஸ்ரோ 2028 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








