Home
News

ISRO-வின் அடுத்த பெரிய மாஸ்டர் பிளான்.. மனிதர்களை விண்வெளியில் தங்க வைக்க இப்படி ஒரு ஐடியாவா?

சந்திரயான்-3 (Chandrayaan-3) திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, இஸ்ரோ (ISRO) இப்போது ஒரு பிரமாண்டமான திட்டத்தில் பணிபுரிந்து வருகிறது. அது தான் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டமாகும். இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.

ககன்யான் திட்டத்தின் (Gaganyaan program) மூலம் மனித விண்வெளிப் பயணத் திறனை மேம்படுத்துவதில் இஸ்ரோ இப்போது கவனம் செலுத்தி வருகிறது. இந்த முயற்சி விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ - ISRO) சந்திரயான்-3 பணியை வெற்றிகரமாக முடித்ததைத் தொடர்ந்து லட்சிய விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் தனது பார்வையை திருப்பியுள்ளது.

ISRO-வின் அடுத்த பெரிய மாஸ்டர் பிளான்.. விண்வெளியில் தங்க ஐடியா ரெடி..

இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத், சிஜிடிஎன் (CGTN) உடனான ஒரு நேர்காணலில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எதிர்காலப் பணிகளுக்கான பல்வேறு சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார். இதில் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் (India's own space station) மற்றும் நீண்ட கால மனித விண்வெளிப் பயணம் (manned exploration and long-duration human spaceflight) போன்ற எதிர்கால திட்டங்களை பற்றி அவர் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

நிலவு (Moon) பயணத்தின் வெற்றிக்குப் பிறகு, அனைத்து சாத்தியக்கூறுகளையும் இஸ்ரோ தீவிரமாக பார்த்து வருகிறது," என்று சோமநாத் கூறினார். "விண்வெளி ஆராய்ச்சியில் இன்னும் என்ன வகையான அறிவியலைச் செய்ய முடியும் என்பதை நாங்கள் பார்க்கிறோம். விண்வெளி நிலையம் இந்திய விண்வெளிப் பொருளாதாரத்திற்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை நாங்கள் உற்று கவனித்து வருகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

விக்ரம் லேண்டர் (Vikram lander) மற்றும் பிரக்யான் ரோவர் (Pragyaan rover) ஆகியவை நிலவில் தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றி, சந்திரயான்-3 பணியை முழுமையாக முடிந்துள்ளது. இந்த பணி ஜூலை 14 அன்று தொடங்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் மேற்பரப்பில் ஒரு மென்மையான தரையிறக்கத்தை நிர்வகித்தது. இந்த வெற்றி இந்தியாவின் விண்வெளி லட்சியங்களை மற்றொரு படிக்கு உயர்த்தியுள்ளது.

இந்த சாதனையைத் தொடர்ந்து, ககன்யான் திட்டத்தின் (Gaganyaan mission) மூலம் மனித விண்வெளிப் பயணத் திறனை மேம்படுத்துவதில் இஸ்ரோ இப்போது கவனம் செலுத்தி வருகிறது. இந்த முயற்சியானது விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதை நோக்கமாகக் (send astronauts into space) கொண்டுள்ளது. இது இந்தியாவிற்கு சொந்தமான ஒரு விண்வெளி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.

ISRO-வின் அடுத்த பெரிய மாஸ்டர் பிளான்.. விண்வெளியில் தங்க ஐடியா ரெடி..

எதிர்காலத்தில் இஸ்ரோ கட்டாயமாக ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என்றும், அதை ரோபோ இயக்கத்துடன் தொடங்க வேண்டும் என்றும் சில மிகப்பெரிய திட்டங்களை இஸ்ரோ கொண்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் கூறியுள்ளார். தற்போதைய நிலையில், இஸ்ரோவிடம் மனிதர்களை விண்வெளிக்கு பறக்க வைக்கும் திறன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மனிதர்களை விண்வெளிக்கு பறக்க வைக்கும் திறனை இஸ்ரோ பாதுகாப்புடன் உருவாக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ககன்யான் திட்டம் மனித விண்வெளிப் பயணத் திறனை நோக்கியதாகும். இது நடந்தவுடன், அடுத்த 20 முதல் 25 ஆண்டுகளில் அடுத்தடுத்த தொகுதிகளில் விண்வெளி நிலையக் கட்டிடத்தை இஸ்ரோ உருவாகுவதை நாம் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்ரோ தனது எதிர்கால நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக மனிதர்களைக் கொண்ட ஆய்வு மற்றும் நீண்ட கால மனித விண்வெளிப் பயணத்தை பரிசீலித்து வருவதாகவும் சோமநாத் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டம் வெற்றி பெற்றால், மனித விண்வெளிப் பயணத்தில் ஏற்கனவே தங்கள் இருப்பை நிலைநாட்டியுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ISRO To Build Indian Space Station and Details About Gaganyaan Mission Big Plan Revealed By Cheif
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X