வீனஸ் கிரகத்தை உடனே ஆராய்ச்சி செய்ய ISRO முடிவு.. நாசாவிற்கே டஃப் கொடுக்கும் திட்டங்களை ISRO செய்யவுள்ளதா?
இஸ்ரோ (ISRO) அடுத்த ஆண்டு டிசம்பரில் 'சுக்ராயன் (Shukrayaan)' எனப்படும் வீனஸ் விண்கலத்தை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. சூரிய மண்டலத்தில் உள்ள பிரகாசமான கிரகமான வீனஸ் மற்றும் அதன் அடர்த்தியான வளிமண்டலத்தை ஆய்வு செய்வதே இந்த பணியின் நோக்கமாகும்.
எக்ஸ்ரே பல்சர்களை (X-ray pulsars) ஆய்வு செய்வதற்காக இந்த ஆண்டு டிசம்பரில் எக்ஸ்-ரே போலரிமீட்டர் செயற்கைக்கோளை (எக்ஸ்போசாட் - XPoSat) விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. சந்திரயான் -3 (Chandrayaan-3) மற்றும் ஆதித்யா-எல் 1 (Aditya-L1) பயணங்களுக்குப் பிறகு, அடுத்த ஆண்டு டிசம்பரில் ஏவப்படும் வீனஸ் மிஷன் அல்லது 'சுக்ராயன்' திட்டத்திற்கு இஸ்ரோ முழு வேகத்தில் இப்போது தயாராகி வருகிறது.

வீனஸ் (Venus) பயணத்திற்கு முன், இந்த ஆண்டு டிசம்பரில், பிரகாசமான எக்ஸ்ரே பல்சர்கள் அல்லது நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்காக XPoSat அல்லது எக்ஸ்-ரே போலரிமீட்டர் சாட்டிலைட் (X-Ray Polarimeter Satellite) ஐ ஏவுவதற்கு விண்வெளி நிறுவனம் தயாராகி வருகிறது. இஸ்ரோவின் தலைவர், எஸ்.சோமநாத் சமீபத்தில் கூறுகையில், சூரிய குடும்பத்தின் மிகவும் பிரகாசமான கிரகமான வீனஸிற்கான பணி ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுள்ளது.
அதன் பேலோடு அறிவியல் கருவிகள் இப்போதே அதன் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 2024 சாளரம் அதன் வெளியீட்டை இலக்காகக் கொண்டு, அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிறுவப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது, பூமியும் வீனஸும் மிகவும் சீரமைக்கப்பட்ட தடத்தில் இருக்கும் என்பதனால், குறைந்த அளவு உந்துசக்தியைப் பயன்படுத்தி விண்கலத்தை அண்டை கிரகத்தின் சுற்றுப்பாதையில் வைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோன்ற அடுத்த சாளரம் 2031 இல் மட்டுமே கிடைக்கும் என்பதனால், இந்த 2024 வாய்ப்பை நாம் தவறவிட கூடாது என்று அவர் கூறியுள்ளார். சமீபத்தில் டெல்லியில் உள்ள இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் உரையாற்றிய இஸ்ரோ தலைவர், "வீனஸ் மிகவும் சுவாரஸ்யமான கிரகம். இது மிகவும் அடர்த்தியான வளிமண்டலத்தையும் கொண்டுள்ளது. வளிமண்டல அழுத்தம் பூமியை விட 100 மடங்கு அதிகமாக உள்ளது.
இது அமிலங்கள் நிறைந்தது. நீங்கள் மேற்பரப்பில் ஊடுருவ முடியாது. அதன் மேற்பரப்பு கடினமானதா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. இதையெல்லாம் நாம் ஏன் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்? பூமி ஒரு நாள் வீனஸாக இருக்கலாம். ஒருவேளை 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமி (Earth) நமது குணாதிசயங்களை மாற்றுவோம். பூமி இப்போது இருப்பது போல் இருந்ததில்லை. நீண்ட காலத்திற்கு முன்பு பூமி உயிர் வாழத் தகுதியான இடமாக இல்லை," என்று அவர் விளக்கினார்.

வீனஸ் சூரியனில் இருந்து இரண்டாவது கிரகம் மற்றும் பூமியின் மிக நெருக்கமான கிரகம் ஆகும். இது நான்கு உள், நிலப்பரப்பு (அல்லது பாறை) கிரகங்களில் ஒன்றாகும், மேலும் இது பெரும்பாலும் பூமியின் டிவின்ஸ் (twins), அதாவது இரட்டையர் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் அளவு மற்றும் அடர்த்தி பூமியுடன் ஒத்திருக்கிறது. பிற நாடுகளால் தொடங்கப்பட்ட வீனஸ் பயணங்களில் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் வீனஸ் எக்ஸ்பிரஸ் 2006 முதல் 2016 வரை சுற்றி வந்தது.
ஜப்பானின் அகாட்சுகி வீனஸ் க்ளைமேட் ஆர்பிட்டர் 2016 முதல் சுற்றுகிறது. நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் ஆகியவை வீனஸை ஆராய்ந்து வருகிறது. சோமநாத் கூறுகையில், "எக்ஸோ வேர்ல்ட்ஸ் (ExoWorlds) என்ற செயற்கைக்கோளை நாங்கள் உருவாக்குகிறோம், இது நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகங்கள் அல்லது பிற நட்சத்திரங்களைச் சுற்றி வருவதற்கான ஒரு பணியாகும்" என்று அவர் கூறினார்.
எக்ஸோ-பிளானெட்ஸ் (exo-planets) குறைந்தபட்சம் 100 வளிமண்டலங்கள் இருப்பதாகக் கருதப்பட்டது. வெளி கிரகங்களின் வளிமண்டலம் மற்றும் அவை வாழக்கூடியவையா அல்லது அவை உயிர்வாழும்தா என்பதை இந்த மிஷன் ஆய்வு செய்யும். இஸ்ரோ தலைவர் மார்ஸ் லேண்டர் மிஷனுக்கான (Mars Lander Mission) திட்டங்களும் உள்ளதாகத் தெரிவித்தார். நாசாவை போல இந்தியா அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளில் வியக்கத்தகு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளப்போகிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








