இஸ்ரோவின் 3 புதிய செயற்கைக்கோள்கள் : ஃபாஸ்ட் இன்டர்நெட்.!
ஜிஎஸ்ஏடி-19, ஜிஎஸ்ஏடி-11 மற்றும் ஜிஎஸ்ஏடி-20 போன்ற செயற்கைக்கோள்களை அனுப்ப உள்ளது.!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல சாதனையைப் படைத்துள்ளது, பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்வெளியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. தற்போது அனுப்பபடும் இந்த ராக்கெட் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் அதிவேக மற்றும் மலிவுற்ற இணையத்தை பெற இஸ்ரோ பல முயற்சிகளை தற்போது செய்துவருகிறது. அடுத்து ஜிஎஸ்ஏடி-19, ஜிஎஸ்ஏடி-11 மற்றும் ஜிஎஸ்ஏடி-20 போன்ற செயற்கைக்கோள்களை அனுப்ப உள்ளது இவற்றில் பல சிறப்புகள் உள்ளது.

இந்தியா:
இந்தியாவின் வளர்ந்துவரும் ஸ்மார்ட் நகரங்களின் எதிர்கால தகவல்தொடர்பு தேவைகள் நிறைவேற்றும் வண்ணம் இந்த செயற்க்கைகோள் அனுப்பபடுகிறது.

ஜிஎஸ்ஏடி-19;
ஜிஎஸ்ஏடி-19 பொருத்தமாட்டில் அடுத்த ஜூன் மாதம் விண்ணில் செலுத்துவதற்கான நடவடிக்கையில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது, இது ஒரு புதிய செயற்கைக்கோள் தகவல் தொடர்பு திட்டம் ஆகும். இந்தியாவின் மிக உயர்ந்த தூர செயற்கைக்கோள்களின் தொடக்கமாகும். என அஹமதாபாத் தளத்தைச் சேர்ந்த ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் சென்டர் இயக்குனர் மிஸ்ரா தெரிவித்தார்.

உலகளாவிய அரங்கில் :
வெளிப்படையாக, உயர்-தூர செயற்கைக்கோள்கள் உலகளாவிய அரங்கில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது அனுப்பபடுகிறது. வேகமானமற்றும் மலிவான இணையங்களை மக்களுக்கு வழங்கும்.

வங்கி:
இவை தொலைதூர பகுதிகளை அடையவும், வங்கி போன்ற சேவைகளுடன் இணைப்புகளை வழங்கவும், அரசு மற்றும் தனியார் வணிகங்களுக்கு உதவும் வகையில், இந்த ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

பீம்ஸ்:
ராக்கெட்டில் பரவலான பகுதிகளை மூடுவதற்கு ஒரு பரந்த ஒற்றை பீம் பயன்படுத்தும். மேலும் பாரம்பரிய செயற்கைக்கோள்கள் "பீம்ஸ்" மீண்டும் பயன்படுத்துகின்றன. இவை பல திறமைகள் பெற்றவை.

ஜிஎஸ்ஏடி-11 மற்றும் ஜிஎஸ்ஏடி-20:
ஜிஎஸ்ஏடி-11 பொருத்தமாட்டில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் விண்ணில் செலுத்துப்படுகிறது, மேலும் ஜிஎஸ்ஏடி-20 அடுத்தவருடம் இறுதியில் விண்ணில் செலுத்துப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications