Home
News

இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் திட்டம் தோல்வியா? எஞ்சினில் கோளாறா? இஸ்ரோ தலைவர் சிவன் என்ன சொன்னார்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அதன் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் உடன் ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட்டை இன்று விண்ணில் பாய்ச்சியது. இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 26 மணி நேர கவுன்ட் டவுனுக்குப் பிறகு இன்று அதிகாலை 5.43 மணிக்கு ஜிஎஸ்எல்வி-எஃப் 10/இஓஎஸ் -03 விண்ணை நோக்கி வெற்றிகரமாகப் புறப்பட்டது.

எதற்காக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது?

எதற்காக இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது?

இந்த ராக்கெட் குறிப்பாக இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை போன்ற சில முக்கிய தகவல்களை அறிந்துக்கொள்ள உதவும் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருந்தது. 'ஈஓஎஸ்-03' (EOS-3) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துத் திட்டமிட்டபடி இன்று அதிகாலை 5.43 மணி அளவில் விண்ணில் பாய்ந்தது. ஆனால், திடீரென ஏற்பட்ட தொழில்நுப்ட கோளாறு காரணமாக இதன் பயணம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

ஜிஎஸ்எல்வி-எஃப் 10/இஓஎஸ் -03 பணியை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை

ஜிஎஸ்எல்வி-எஃப் 10/இஓஎஸ் -03 பணியை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை

மிஷன் கன்ட்ரோல் சென்டரில் ரேஞ்ச் ஆபரேஷன் இயக்குனரால் "செயல்திறன் ஒழுங்கின்மை காரணமாக பணியை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை" என்று அறிவிக்கப்பட்டது. எதிர்பாராத ஒரு ஒழுங்கின்மை காரணமாக ஜிஎஸ்எல்வி-எஃப் 10/இஓஎஸ் -03 தனது பயணத்தை "முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை" என்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று அதிகாலை ராக்கெட் விண்ணில் ஏவிய சிறிது நேரத்தில் கூறியது.

அதிநவீன சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்

அதிநவீன சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்

முதல் இரண்டு கட்டங்கள் வெற்றியடைந்த பின், கிரையோஜெனிக் கட்டத்தில் செயல்திறன் குறைபாடு காணப்பட்டது. இதனால், ஜிஎஸ்எல்வி-எஃப் 10/இஓஎஸ்-03 தனது பணியை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. EOS-03 என்பது ஒரு அதிநவீன சுறுசுறுப்பான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இது GSLV-F10 ஆல் ஒரு புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டுள்ளது.

ஓஜிவ் வடிவ பேலோட் ஃபேரிங்

இது சூறாவளிகள், மேகதிருப்புகள் மற்றும் இடியுடன் கூடிய இயற்கை பேரழிவுகளை விரைவாகக் கண்காணிக்க உதவும். இந்த ஜிஎஸ்எல்வி விமானத்தில் முதல் முறையாக 4 மீட்டர் விட்டம் கொண்ட ஓஜிவ் வடிவ பேலோட் ஃபேரிங் பறக்கப்படுகிறது. இது ஜிஎஸ்எல்வியின் பதினான்காவது விமானம் என்று ஏவுதலின் போது இஸ்ரோ கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுதல் முதலில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால், கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக இது ஒத்திவைக்கப்பட்டது.

புதிய செயற்கைக்கோள்

புதிய செயற்கைக்கோள்

புதிய செயற்கைக்கோள் விவசாயம், வனவியல், நீர்நிலைகள் மற்றும் பேரிடர் எச்சரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்பாட்டுக்கு முக்கிய தகவல்களை வழங்க உள்ளது. ஜிஎஸ்எல்வி அல்லது ஜியோசின்க்ரோனஸ் சேட்டிலைட் லான்ச் வெஹிகில் (ஜிஎஸ்எல்வி) எம்.கே. II -க்கான இரண்டாவது விமானம் இதுவாகும். இது கடைசியாகச் சந்திரயான் -2 நிலவின் மிஷன் விண்கலத்துடன் வெடித்தது.

Best Mobiles in India

English summary
ISRO GSLV F10 Fails To Launch Earth Observation Satellite Into Intended Orbit : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X