Home
News

அடுத்த இலக்கு சூரியன்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்., எப்போது தெரியுமா?

2020 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு புதிய பயணங்களை திட்டமிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் 10-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் சிவன் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

ஜிசாட் -1 செயற்கைகோள்

ஜிசாட் -1 செயற்கைகோள்

ஜிசாட் -1 செயற்கைகோள் இந்த பட்டியலில் மேம்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களான ஜிசாட் -1 மற்றும் கிசாட் -2 ஆகியவை அடங்கும். கூடுதலாக, பூமியின் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் ரிசாட் 2 பிஆர் 2 மற்றும் கண்காணிப்புக்கான மைக்ரோசாட் ஆகியவையும் ஏவப்பட உள்ளது.

ஆதித்யா 1(சன் மிஷன்) 2020

ஆதித்யா 1(சன் மிஷன்) 2020

ஆதித்யா 1(சன் மிஷன்) 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆதித்யா எல் 1 (சன்) மிஷனையும், டிசம்பரில் ககன்யானின் முதல் ஆளில்லா சோதனை விமானத்தையும் தொடங்க இலக்கு வைத்துள்ளோம் என்று தலைவர் சிவன் கூறியுள்ளார். ஆதித்யா மிஷன் சூரியனை ஆராய்வதற்கான இந்தியாவின் முதல் பணி ஆகும். இதை விண்ணுக்கு எடுத்து செல்ல 400 கிலோ பி.எஸ்.எல்.வி செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதித்யா-எல்1., சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைகோள்

ஆதித்யா-எல்1., சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைகோள்

2020-ம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆதித்யா-எல்1 என்ற சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. ஆதித்யா-எல்1 திட்டம் சூரியனை ஆராய்வதற்கான இந்தியாவின் முதல் பணியாகும். இதை விண்ணுக்கு எடுத்து செல்ல 400 கிலோ பி.எஸ்.எல்.வி ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.

சூரியனை துல்லியமாக ஆராய திட்டம்

சூரியனை துல்லியமாக ஆராய திட்டம்

இந்த ராக்கெட் 6 விஞ்ஞான ஆராய்ச்சி செயற்கைகோள்களை சுமந்து செல்ல உள்ளது. அவை பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ‘லக்ரான்ஜியன் புள்ளி' 1 (எல்-1)-யை சுற்றி உள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வின் போது எந்தவொரு கிரகணமும் இல்லாமல் சூரியனை துல்லியமாக ஆராய முடியும் என கண்காணிக்கப்படுகிறது. இது இஸ்ரோவுக்கு ஒரு பெரிய வெற்றியை அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரயான் 3 அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும்

சந்திரயான் 3 அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும்

பட்ஜெட் சுமார் ரூ.666 கோடி அடுத்த ஆண்டு இஸ்ரோவிற்கு அரசு வழங்கவுள்ள பட்ஜெட் சுமார் ரூ.666 கோடியாகும். சந்திரயான் 3 அடுத்தாண்டு விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது. சந்திரயான் 3 திட்டத்தில் லேண்டர், ரோவர் மற்றும் கூடுதல் எரிபொருள் ஏற்றிச் செல்ல ஒரு பாகமும் இருக்கும். இதற்கான 75 கோடியில் ரூ.60 கோடி, சந்திரயான் 3-க்குத் தேவையான கருவிகள், பாகங்கள் வாங்குவதற்கும் ரூ.15 கோடி மற்ற செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரோ ஊழியர்களுக்கு அதிக ஊதியம் செலுத்த திட்டம்

இஸ்ரோ ஊழியர்களுக்கு அதிக ஊதியம் செலுத்த திட்டம்

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டமும் அடுத்தாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. மூன்று விண்வெளி வீரர்கள் பல்வேறு விண்பயிற்சி சோதனைகளுக்காக ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பப்படு உள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆர்.எல்.வி என்ற சிறிய செயற்கைக்கோள் செலுத்தும் கருவியும் 2020 ஆம் ஆண்டில் ஏவப்பட உள்ளது. செலவினங்களைக் குறைப்பதிலும், இஸ்ரோ ஊழியர்களுக்கு அதிக ஊதியம் செலுத்துவதிலும் ஆர்.எல்.வி ராக்கெட்டுகள் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Isro decide to Aditya L1 mission to launch the sun
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X