அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய திட்டம்!

அதி வேகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்டிஎஸ் என்ற புதிய டெப்பாசிட் ஸ்கீம் வசதியினை வழங்க திட்டமிட்டுள்ளது ஐஆர்சிடிசி இணையதளம்.
இந்த ஆர்டிஎஸ் அக்கவுன்டில் ரூ. 1,500ரில் இருந்து ரூ. 2,000 வரை முன் கூட்டியே பணத்தை கட்டி வைத்து விட முடியும். வங்கி கணக்கில் இருந்து பணத்தை, ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு மாற்றுவதில் சில இடையூறுகள் ஏற்படுகிறது. இதனால் நேரம் அதிகம் எடுத்து கொள்ளப்படுகிறது.
இப்படி நேரம் அதிகம் வீணாவதால், குறித்த நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமலும் போகிறது. ஐஆர்சிடிசி இணையதளத்தின் ரயில் டிக்கெட் முன்பதிவுத் திறனை கணிசமாக அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்திருந்தது.
இதற்காக புதிய தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தி ஐஆர்சிடிசி இணையதளத்தின் திறனை, மேம்படுத்த ரயில்வே துறை பல முயற்சிகளை மேற் கொண்டு வருவதாகவும் செய்திகள் முன்னமே நமது தமிழ் கிஸ்பாட்டில் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆர்டிஎஸ் என்ற திட்டத்தின் மூலம் ரயில் டிக்கெட்
முன்பதிவு செய்வதில் பல புதிய மாற்றங்களை பெற முடியும்.
ஆர்டிஎஸ் அகவுன்டில் இருந்து பணபரிவர்த்தனை செய்து ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது மிக எளிதாகும். இதற்கு அதிக நேரம் தேவைப்படாது. அது மட்டும் அல்லாமல் ரயில் டிகெட்டை கேன்சல் செய்தால், அந்த பணம் மீண்டும் தங்களது வங்கி கணக்கிற்கு வந்து சேர தாமதமாகிறது.
ஆனால் ஆர்டிஎஸ் அகவுன்ட் ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் திறக்கப்படுவதால், கேன்சல் செய்யப்படும் ரயில் டிக்கெட்டின் பணம் வெகு சீக்கிரத்தில் ஆர்டிஎஸ் அக்கவுன்டிற்கு திரும்ப வந்து சேர்ந்துவிடும்.


Click it and Unblock the Notifications