Just In
- 57 min ago
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- 1 hr ago
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- 2 hrs ago
அடி தூள்: சோனி கேமரா சென்சார் வசதியுடன் களமிறங்கும் 2 புதிய விவோ போன்கள்.!
- 3 hrs ago
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
Don't Miss
- Automobiles
முன்ன மாதிரியில்ல ஹோண்டா வாகனங்கள் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்... கிடுகிடுவென சரியும் விற்பனை!
- News
எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்க முடியாது: தேர்தல் ஆணையம் அதிரடி
- Finance
அதானி குழும கடன் எவ்வளவு.. எஸ்பிஐ டூ ஐடிஎப்சி.. வெளியாகும் ரிப்போர்ட்..!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Lifestyle
எச்சரிக்கை! உங்க காலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்கலாமாம்!
- Movies
விஜய் சூப்பர் ஸ்டாரா? வில்லங்கமான கேள்வி கேட்ட செய்தியாளர்.. டென்ஷனான எஸ்.ஏ.சந்திரசேகர்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
IRCTC பயணிகளுக்கு இப்படி ஒரு புது விதியா? ரயில் பயணிகளே கொஞ்சம் கவனியுங்க! இது ரொம்ப முக்கியம்
இந்தியாவின் மிக முக்கியமான போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக நம்முடைய இந்திய ரயில்வே திகழ்கிறது. காரணம், மக்களுக்கான வசதியான பயண அனுபவம் ரயில் சேவையின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. குறிப்பாக, குறைந்த கட்டணத்தில் வசதியான பயணத்தை அனுபவிக்க ரயில் பயணமே சிறந்ததாகக் கருதப்படுகிறது. மக்களின் பயண அனுபவத்தை மேம்படுத்த IRCTC பல புதிய விதிகளை அமல்படுத்தி வருகிறது.

ரயில் பயணிகளுக்காக IRCTC அறிமுகம் செய்த புதிய விதி
அந்த வரிசையில், IRCTC தற்போது ஒரு புதிய விதியை ரயில் பயணிகளுக்காக அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய விதி ரயிலைத் தவற விடும் சூழ்நிலை ஏற்படும் பயணிகளுக்குப் பெரிதும் பயனளித்து உதவுகிறது. ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளும் இந்த விதியை கட்டாயம் தெரிந்துகொள்வது சிறப்பானது. சரி, இப்போது இந்த புதிய விதி பயணிகளுக்கு எந்த விதத்தில் பயனளிக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.

40 கோடி பேர் தினமும் பயணிக்கும் வாழ்க்கை பாதை
இந்திய ரயில்வே இந்தியாவின் மிக முக்கியமான 'வாழ்க்கை பாதை' என்று அழைக்கப்படுகிறது. காரணம், அதிகளவு மக்கள் ரயில் மூலம் பயணிக்கிறார்கள். இந்திய ரயில்வே சேவையின் மூலம் தினமும் சுமார் 40 கோடி பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரயில்வே தற்போது 1,490 அஞ்சல் மற்றும் விரைவு ரயில்களையும், 5,397 புறநகர் ரயில் சேவைகளையும், 947 பயணிகள் ரயில்களையும் இயக்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.

பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் IRCTC
ரயிலில் பயணம் செய்யும் போது, ஒவ்வொரு பயணிகளும் தங்கள் பயணம் சுகமாகவும் இனிமையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதை உறுதிப்படுத்த நமது இந்திய ரயில்வே தொடர்ந்து பல புதிய விதிகளையும், திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே அறிமுகம் செய்த ஒரு முக்கிய வசதியைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் இப்போது பார்க்கப்போகிறோம்.

இனி போர்டிங் ஸ்டேஷனை மாற்றி கூட ரயிலில் பயணிக்கலாமா?
இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ள புதிய விதியின் படி, இனி ரயில் பயணிகள், அவர்கள் பதிவு செய்திருந்த ரயில் நிலையத்திற்குப் பதிலாக வேறு எந்த நிலையத்திலிருந்து வேண்டுமானாலும் ரயிலைப் பிடிக்கலாம் என்று IRCTC கூறியுள்ளது. இதற்காக இனி எந்தவித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது என்றும் IRCTC தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த விதியை ரயில் பயணிகள் பின்பற்ற சில நிபந்தனைகளையும் IRCTC வெளியிட்டுள்ளது. இந்த விதி எப்படிச் செயல்படும் என்பது பற்றியும் ஐ.ஆர்.சி.டி.சி விளக்கியுள்ளது.

மக்களின் புகார்களுக்கு செவி சாய்க்கிறதா IRCTC?
IRCTC பயணிகளால் ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட சில அசவுகரியமான புகார்களைத் தொடர்ந்து இந்த விதி இப்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது, சில பயணிகளுக்கான போர்டிங் ஸ்டேஷன் வெகு தொலைவில் இருப்பதால், ரயிலை தவறி விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், சில நேரங்களில் பயணிகள் அருகில் இருக்கும் மற்ற போர்டிங் ஸ்டேஷனில் இருந்து ரயிலைப் பிடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால், அபராதமும் வசூலிக்கப்படுகிறது என்று புகார் அளிக்கப்பட்டது.

இந்த விதிக்கு இந்த நிபந்தனையை கடைபிடிப்பது கட்டாயம்
இதற்கு முன் இருந்த விதியின் படி, பதிவு செய்யப்பட்ட ரயில் நிலையத்திலிருந்து ரயில் பயணிகள் பயணத்தை துவங்காமல், மற்றொரு நிலையத்திலிருந்து ரயில் பயணத்தைத் துவங்கினால் அதற்கென்று அபராதமும் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய விதியின் படி, ரயில் பயணிகளின் போர்டிங் ஸ்டேஷன் தூரமாக இருக்கிறது என்று கருதினால், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஆன்லைன் மூலம் போர்டிங் ஸ்டேஷன் விபரங்களில் மாற்றிக்கொள்ளலாம்.

இந்த விதி எத்தனை முறை செல்லுபடியாகும்?
இப்படி போர்டிங் ஸ்டேஷனை விபரங்களை மாற்றிய பின்னர், பயணிகள் முன்னர் பதிவு செய்த போர்டிங் ஸ்டேஷனில் இருந்து ரயிலைப் பிடிக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்படி திருத்தங்களை ஒரு ரயில் பயணத்திற்கு ஒருமுறை மட்டுமே நீங்கள் ஆன்லைன் மூலம் மாற்றி அமைக்க முடியும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த முறையில் உங்களுக்கான போர்டிங் ஸ்டேஷனை மாற்றிய பின் ரயிலைப் பிடித்தால் மட்டுமே அபராதம் வசூலிக்கப்படமாட்டாது.

வேறொரு நிலையத்திலிருந்து ரயிலைப் பிடித்தால் என்னவாகும்?
ஒருவேளை இப்படி இல்லாமல், இக்கட்டான சூழ்நிலையில் பயணிகள் போர்டிங் ஸ்டேஷனை மாற்றாமல் வேறொரு நிலையத்திலிருந்து ரயிலைப் பிடித்தால் என்னவாகும்? என்பதை இப்போது பார்க்கலாம். ரயில் புறப்படுவதற்கு முன்னதாக ஆன்லைன் மூலமாக போர்டிங் ஸ்டேஷனை மாற்றாமல் வேறு நிலையத்தில் இருந்து பயணத்தைத் துவங்கினால், அதற்கான அபராதத்தை IRCTC உங்களிடம் இருந்து வசூலிக்கும் என்பதை மறக்காதீர்கள்.

யாருக்கெல்லாம் இந்த விதி பொருந்தும்?
குறிப்பாக, நீங்கள் பதிவு செய்த போர்டிங் பாயிண்ட் மற்றும் நீங்கள் ரயிலை பிடித்த மாற்று நிலையங்களுக்கு இடையே உள்ள கட்டண வித்தியாசத்தையும் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. IRCTC அறிமுகம் செய்த இந்த விதி, குறிப்பாக ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது ஆன்லைன் மூலம் எப்படி போர்டிங் ஸ்டேஷன் விபரங்களை மாற்றி அமைப்பது என்று இப்போது பார்க்கலாம்.

போர்டிங் ஸ்டேஷன் விபரங்களை எப்படி ஆன்லைன் மூலம் மாற்றுவது?
- IRCTC இன் https://www.irctc.co.in/nget/train-search என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
- உங்கள் IRCTC கணக்கிற்கான லாகின் விபரங்களை உள்ளிட்டு, பாஸ்வோர்டை டைப் செய்து உள்நுழையவும்.
- 'Booking Ticket History என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது பட்டியலில் இருக்கும் ரயில் விபரங்களிலிருந்து, நீங்கள் பயணிக்கும் ரயிலைத் தேர்வு செய்யுங்கள்.
- இப்போது அதில் உள்ள 'Boarding Point Changes' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இப்போது ரயிலுக்கான புதிய போர்டிங் ஸ்டேஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
- புதிய நிலையத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு OK என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
- போர்டிங் ஸ்டேஷனை மாற்றங்களை உறுதிப்படுத்த உங்கள் மொபைல் போனிற்கு SMS அனுப்பப்படும்.
- அதில் உள்ள OTP விபரங்களை உள்ளிட்டு உறுதி செய்யவும்.
- இப்படி உங்களுடைய போர்டிங் ஸ்டேஷன் விபரங்களை ஆன்லைன் மூலம் நீங்கள் மாற்றி அமைக்கலாம்.

SMS மூலம் மாற்றத்தை உறுதிப்படுத்துங்கள்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470