சூடுபிடிக்கும் ஐபிஎல் 2020: இந்தாண்டு டைட்டில் ஸ்பான்சர் இதுதான்!
கொரோனா தொற்று பரவல் ஐபிஎல் தொடரை நடத்தவிடாமல் கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றிவிடுமோ என்ற கேள்வி சமூகவலைதளங்களை ஒரு கலக்குகலக்கியது. இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டதோடு டைட்டில் ஸ்பான்சர் ஏலப் பணியும் முடிந்துவிட்டது.

கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டி
கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்து அறிவித்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி
இதற்கான ஏற்பாடுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னதாகவே தொடங்கி விட்டது எனவும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் வருகிற ஆகஸ்ட் 20 முதல் ஐக்கிய அரபு அமீரகம் கிளம்ப உள்ளனர்.

இரண்டு முறை கொரோனா பரிசோதனை
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளது. அதேபோல் இந்த தொடரில் பங்கேற்கும் அனைவரும் பிசிசிஐ விதித்துள்ள முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி
ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். மறுபுறம் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள்
கடைசியாக தோனி விளையாடிய ஒருநாள் போட்டி கடந்த வருடத்திற்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் செமி ஃபைனல் ஆகும். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக தோனி களமிறங்கும் ஐபிஎல் தொடர் நடைபெறும் நாட்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

டைட்டில் ஸ்பான்சர் ட்ரீம் 1்1
ஐபிஎல் 2020 தொடருக்கான டைட்டில் ஸ்பான்சரை ட்ரீம் 11 நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ ஐபிஎல் ஏலம் குறித்து அறிவித்தது. இதற்கு அமேசான், பதஞ்சலி, பைஜூ, ட்ரீம் லெவன், ஜியோ, டாடா ஆகிய நிறுவனங்கள் போட்டிப்போடுதாக தகவல்கல் வெளியானது.

கடும் போட்டி
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பானசராக இருக்கு பைஜூ, ஜபிஎல் பார்னராக இருக்கும் ட்ரீம் 11, கொரோனா பாதிப்பில் நிவாரனத் தொகையை வாரி வழங்கிய டாடா ஆகிய நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவியது.

ஒரு ஸ்பான்சர் இரண்டு பார்டனர்கள்
கொரோனா பரவலால் ஏற்பட்ட இழைப்பை சரிசெய்ய ஒரு ஸ்பான்சரை இரண்டு பார்டனர்களையும் சேர்த்துக் கொள்ள பிசிசிஐ முடிவு செய்தது. முன்னதாக இருந்த விவோ சீன நிறுவனம் என்பதால் இந்தாண்டு விலகியது இருப்பினும் விவோ 2018-2020 வரை ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

ரூ. 222 கோடிக்கு ஒப்பந்தம்
இதில் டைட்டில் ஸ்பான்சரை ட்ரீம் 11 நிறுவனம் 222 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பெற்றுள்ளது. முன்னதாக ஐபிஎல் தொடர் டைட்டில் டைட்டில் ஸ்பான்சராக இருந்து விவோ சீன நிறுவனம் என்ற காரணத்தால் விலகிய நிலையில், இந்த ஆண்டு டைட்டில் ஸ்பான்சரை ட்ரீம் 11 பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications