தமிழ்நாட்டில் தயாராகிறது: ஐபோன்களுக்கு இனி மலிவு விலை.!
ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவிலும் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்த போன்களுக்கு இளைஞர்கள் மற்றும் பொரியோர்களையும் கவர்ந்திழுக்கின்றது. உலகில் இந்த பிரீமியம் போனவும் ஆப்ப
ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்தியாவிலும் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்த போன்களுக்கு இளைஞர்கள் மற்றும் பொரியோர்களையும் கவர்ந்திழுக்கின்றது.

உலகில் இந்த பிரீமியம் போனவும் ஆப்பிள் இருக்கின்றது. இந்த போன்களை வாங்க இந்தியாவில் குஷியாகவே இருக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் ஐ போன்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன. இதனால் மலிவு விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும், ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதால், வரி உள்ளிட்டவை நீக்கப்படும் பட்சத்தில் மலிவு விலைக்கு ஐபோன்கள் இனி விற்பனைக்கு வருகின்றது.

ஐபோன்கள்களுக்கு நல்ல வரவேற்பு:
இந்தியாவில் ஐபோன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. உலகம் முழுக்க ஆப்பிள் நிறுவனத்தன் தயாரிப்பான ஐபோன்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்த போன்களை வாங்க இந்தியாவிலும் நல்ல வரவேற்பு இருக்கின்றது.
இதன் தனித்துவத்தின் அடிப்படையில் நல்ல வடிவமைப்பு, கலர் உள்ளிட்டவைகளும் முக்கியமானதாக இருக்கின்றது. அதிகபடியான இந்தியர்கள், ஆப்பிள் ஸ்மார்ட்போன்களை வாங்காமல் இருப்பதற்கு காரணம் இதன் விலை. இந்த ஸ்மார்ட்போன்கள், இந்தியாவிற்கு வெளியில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதால், வரிகள் காரணமாக இதன் விலை உச்சத்தில் உள்ளது.

இந்தியாவில் தயாராகும் ஸ்மார்ட்போன்கள்:
ஆனால், தற்போது இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிற்குள்ளேயே உற்பத்தியாகிறது. அதனால், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியான தகவலின்படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் XR மற்றும் ஐபோன் XS ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களை பாக்ஸ்கான் (Foxconn) என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் தயாராகின்றது:
முன்னதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட தகவலின் ஹான்ஹோய் தொழிற்சாலை (Hon Hai Precision Industry) எனப்படும் பாக்ஸ்கான் நிறுவனம், ஐபோன் எக்ஸ் வரிசயை ஸ்மார்ட்போன்களை தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் தயாரிப்பு நிலையத்தை துவங்கியுள்ளது.

பெங்களூரிலும் தயாரிப்பு:
ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் விஸ்டர்ன் கார்ப் (Wistron Corp) நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில், SE, ஐபோன் 6S, ஐபோன் 7 ஆகிய ஸ்மார்ட்போன்களை தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த போன்கள் எதிர்காலத்தில் வாங்க முடியாத என்று நினைத்தவர்களுக்கும் எளிமையாக வாங்க வைக்க ஆப்பிள் நிறுவனம் தற்போது. தமிழ்நாடு, பெங்களூரில் இந்தியா முழுக்க விலை குறைகின்றது.

விலையும் குறைகின்றது:
இம்மாதிரியான உள்நாட்டு தயாரிப்பு, ஆப்பிள் ஸ்மார்ட்போன்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்கும், அதுமட்டுமின்றி தன் சொந்த கடைகளை இந்தியாவில் துவங்க ஆப்பிள் நிறுவனத்திற்கு உதவியாக இருக்கும்.
முன்னதாக விஸ்டர்ன் கார்ப் (Wistron Corp) நிறுவனம் ஐபோன் SE, ஐபோன் 6S, ஐபோன் 7 ஆகிய ஸ்மார்ட்போன்களை தயாரித்து ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்தியாவில் சில மாதங்களில் ஐ போன்களின் விலையும் குறையும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications