ஐபோன் 15 இல் இப்படி ஒரு ஆபத்து இருக்கிறதா? ஆப்பிள் ஸ்டோர் கொடுத்த எச்சரிக்கை.. உஷார் மக்களே..
ஐபோன் 15 (iPhone 15) பற்றிய தகவல்கள் பரபரப்பாக இணையத்தை மூழ்கடித்து வருகிறது. இதுவரை ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை பற்றிய பல அற்புதமான விஷயங்களை மட்டுமே கேட்டு வந்த நமக்கு, இப்போது ஒரு எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது.
ஆம், மிகவும் ஆபத்தான எச்சரிக்கை தகவலை ஆப்பிள் ஸ்டோர் அதிகாரிகளே வெளியிட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. சரி, விஷயம் என்னவென்று பார்க்கலாம் வாங்க. தொழில்நுட்ப ஆர்வலர்களின் கைகளில் ஐபோன் 15 மாடல்கள் கடந்த வாரம் முதல் கிடைக்க துவங்கியது. அதனை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்கள், புதிய ஐபோனை பெற அருகிலுள்ள ஆப்பிள் ஸ்டோருக்குச் செல்ல துவங்கினர்.

புதிய ஐபோன் 15 சாதனத்தில் இருக்கும் சில புதிய அம்சங்களைப் பற்றி டிம் கூக் (Tim Cook) விளக்கினார். இதில், இந்த வருட ஐபோன் 15 சாதனம் உலகளாவிய USB-C கேபிள்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டது. ஐரோப்பிய நாடுகளால் செயல்படுத்தப்பட்ட புதிய சட்டத்தினால் இது நிஜமானது. திறம்பட, லைட்டினிங் சர்ஜரில் இருந்து USB-C க்கு ஆப்பிள் நிறுவனம் அதன் சாதனத்தை இப்போது மாற்றியுள்ளது.
இருப்பினும், கடந்த வாரம் ஐபோன் 15 வெளியிடப்பட்டதிலிருந்து, ஐபோன் 15 பயனர்களால் பல புகார்கள் எழதுவங்கியுள்ளது. இதில் பலர் புதிய ஐபோன் 15 சாதனம் அடிக்கடி வெப்பமயமாவதாக புகார் அளித்துள்ளனர். அதாவது, ஓவர் ஹீட்டிங் (Over heating) சிக்கலை புதிய ஐபோன் 15 அடிக்கடி சந்திப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் சில பயனர்கள், ஐபோன் 15 சாதனத்தை கையில் வைத்திருக்க முடியாத அளவுக்கு சூடாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
IGN உடனான ஒரு நேர்காணலில் சாதனம் மிகவும் சூடாவதற்கான சாத்தியத்தை ஆப்பிள் (Apple) ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நேர்காணலாலில், ஆப்பிள் தலைவர் டிம் மில்லட் கூறிய விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அவர் கூறியதாவது, ''ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) கோட்பாட்டளவில் பின்புறம் வழியாக 'ஒரு துளையை எரிக்கும்' சக்தியைக் கொண்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.

இப்போது, ஆண்ட்ராய்டு யூ.எஸ்.பி-சி சார்ஜர்களைப் (USB Type-C Charger) பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏனெனில் இவை ஐபோன் 15 மாடல்களை அதிக வெப்பமாக்கக்கூடும். சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஃபோஷானில் உள்ள ஆப்பிள் ஸ்டோர், ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் இணைக்கப்பட்ட அல்லது அந்த வகை மொபைல் சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட USB-C கேபிள்களைப் பயன்படுத்துவது குறித்து iPhone 15 பயனர்களை எச்சரித்துள்ளது.
இதை பற்றி தொழில்நுட்ப ஆர்வலர்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும், நம்மில் பெரும்பாலோருக்கு இந்த விஷயம் நிச்சயமாக தெரியாமல் இருக்கிறது என்பதே உண்மையாகும். உண்மை என்னவென்றால், இங்கு வெவ்வேறு வகையான USB-C கேபிள்கள் உள்ளன என்பது நம்மில் பலருக்கு தெரியாத ஒரு விஷயமாகும். ஆண்ட்ராய்டு-குறிப்பிட்ட USB-C கேபிளில், ஒற்றை-வரிசை 9-பின் (9-Pin USB Type-C) மற்றும் ஒற்றை-வரிசை 11-பின் (Pin) இணைப்பிகளுக்கு இடையே சிறிய இடைவெளி உள்ளது.
இதனால், அதிக வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த எச்சரிக்கை இந்த குறிப்பிட்ட சீன அங்காடியுடன் மட்டும் இணைக்கப்படவில்லை, சீன போர்ட்டல் CNMO இன் சமீபத்திய அறிக்கையின்படி, சீனா முழுவதும் உள்ள பல ஆப்பிள் பிரத்தியேக கடைகள் இதேபோன்ற எச்சரிக்கையை வழங்கியுள்ளன. இருப்பினும், ஐபோன் 15 பயனர்களை நிறுவனத்தின் சொந்த யூ.எஸ்.பி-சி கேபிள்களை (Apple USB Type-C cable) வாங்க ஊக்குவிக்கும் ஆப்பிள் முயற்சியாக இது இருக்கலாம் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே வீட்டில் இருக்கும் கேபிளைப் பயன்படுத்தும் பயனர்களுக்குப் பதிலாக ஆப்பிள் மற்றொரு தயாரிப்புக்கு கட்டணம் வசூலிக்கக்கூடும் என்பதால், வணிகப் பக்கத்திலிருந்து இது நிச்சயமாக அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆண்ட்ராய்டு (Android) கேபிளைப் பயன்படுத்துவதால் ஐபோன் 15 இன் யூ.எஸ்.பி-சி போர்ட் உருகிய சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஐபோனின் சரியான யுஎஸ்பி டைப் சி கேபிளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








