உலகின் முதல் செல்பீ அருங்காட்சியகம், இது எப்படா ஆரம்பிச்சீங்க
உலகளவில் செல்பீ தலைநகரமாக இருக்கும் பிலிப்பைன்ஸ் நகரில் கலை அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. கலை பொருட்களுடன் செல்பீ எடுக்க அனுமதிப்பதோடு அதனை ஷேர் செய்யவும் இங்கு அனுமதி அளிக்கப்படுகின்றது.

பிலிப்பைன்ஸ் நகரின் மனிலா என்ற இடத்தில் முப்பரிமான ஓவியயங்கள் இடம்பெற்றிருப்பதோடு உலகின் முதல் செல்பீ அருங்காட்சியகமாகவும் விளங்குகின்றது.
வாடிக்கையாளர்கள் செல்பீ எடுப்பதோடு அங்கிருக்கும் ஓவியங்களுடன் விளைாயாடவும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இங்கு இருக்கும் ஓவிங்கள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் முழுமையாகாது. இந்த அருங்காட்சியகம் உலகில் இருக்கும் மற்ற அருங்காட்சியகங்கள் மறுக்கும் விஷயங்களை அனுமதிப்பதே இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.
கீழ் வரும் ஸ்லைடர்களில் செல்பீ குறித்து உங்களுக்கு தெரிந்திராத அம்சங்களை பாருங்கள்..
உலகின் முதல் செல்பீ 1839 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இதை எடுத்தவர் ராபர்ட் கர்னீலியஸ். 2013 ஆம் ஆண்டு செல்பீ என்ற வார்த்தை ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரியில் சேர்க்கப்பட்டதோடு அந்தாண்டின் சிறந்த வார்த்தையாகவும் அறிவிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு டேிவிட் ஸ்லேட்டர் எனும் புகைப்படக்காரர் குரங்கின் அருகில் தனது கேமராவை வைத்தார், அங்கு அந்த குரங்கின் செல்பீ மிகவும் அழகாக எடுக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த செல்பீ உலகம் முழுவதிலும் பிரபலமானது. 2014 ஆம் ஆண்டு செல்பீ ஸ்டிக் விற்பனை மிகவும் அமோகமாக இருந்தது. செல்பீ என்ற வார்த்தையை அறிந்து கொள்ள 2014 ஆம் ஆண்டு கூகுளில் தேடல் 6 மடங்கு அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆண்கள் அழகாக செல்பீ எடுப்பது எப்படி என கூகுளில் அதிகம் தேடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மற்ற சமூக வலை தளங்களை விட பேஸ்புக்கில் தான் 84% செல்பீக்கள் ஷேர் செய்யப்பட்டன. #செல்பீ என ஹாஷ்டேக் முதல் முதலில் ப்ளிக்கர் தளத்தில் 2004 ஆண்டு பயன்படுத்தப்பட்டது.
செல்பீ

வார்த்தை

குரங்கு

ஆஸ்கர் செல்பீ

செல்பீ ஸ்டிக்

செல்பீ

செல்பீ

ஷேர்

செல்பீ


Click it and Unblock the Notifications