சீனாவை ஓரே அடியாக பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த இந்தியா.!
சீனா மக்கள் தொகையில் அதிகமாக இருந்தாலும், பொருளாதாரத்திலும் இந்தியாவை விட வேகமாக இருக்கின்றது. மேலும், ராணுவத்திற்கு நிதி ஒதுக்குவதிலும் சீனா முன்னிலையில் இருக்கின்றது. இப்படி இருக்கையில் நீங்கள்
சீனா மக்கள் தொகையில் அதிகமாக இருந்தாலும், பொருளாதாரத்திலும் இந்தியாவை விட வேகமாக இருக்கின்றது.
மேலும், ராணுவத்திற்கு நிதி ஒதுக்குவதிலும் சீனா முன்னிலையில் இருக்கின்றது.

இப்படி இருக்கையில் நீங்கள் எவ்வாறு இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து இருக்கின்றது என்று நினைக்கின்றீர்கள். இதற்கான காரணத்தையும் நீங்கள் அறிவீர்கள்.

சீனா மக்கள் தொகை:
சீனாவில் மக்கள் தொகை 138.64 கோடியாக இருக்கின்றது. மேலும், அங்கு பொருளாதார நிலையிலும் இந்தியாவை விட சீனா வலிமையாக இருக்கின்றது. கல்வி மற்றும் தொழில்நுட்பம், வணிகம் , விண்வெளி என அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றது.

இந்திய மக்கள் தொகை:
இந்தியாவில் மக்கள் தொகை 132.92 கோடியாக இருக்கின்றது. மேலும், பொருளாரத்திலும் வேகமாக வளர்ந்து வருகின்றது. மேலும் கல்வி , தொழில்நுட்பம், வணிகம், விண்வெளி என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடும் வகையில் இருக்கின்றது.

இந்தியாவுக்கு குறிவைக்கும் பன்னாடுகள்:
இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக இருந்தாலும், இங்கு வசிப்போர் அதிகமாக செல்போன் அழைபேசி உள்ளிட்டவை நீண்ட நேரம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்தியாவில் பன்னாட்டு செல்போன், தொலைபேசி நிறுவனங்களும் குறி வைத்து நுழைந்து விடுகின்றனர் .

120 கோடி செல்போன்கள்:
இந்தியாவில் 120 கோடி செல்போன்கள் உள்ளன. கடந்தாண்டில் மட்டும் இந்தியர்கள், ஆயிரத்து 200 கோடிமுறை செல்போன் செயலிகளை பதிவிறக்கம் செய்துள்ளனர், இந்தியாவில் 56 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.
டுவிட்டரில் பதிவு:
இணையள சேவை பயன்படுத்துவது தொடர்பாக நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இந்தியர்கள் பயன்படுத்தும் டேட்டா:
சீனர்கள் ஒரு மாதத்துக்கு சராசரியாக 5.5 ஜி.பி. டேட்டாவை பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்தியர்கள் 8.3 ஜி.பி. டேட்டாவை பயன்படுத்துகின்றனர்.

வேகமான வளர்ச்சி:
"டிஜிட்டல் நுகர்வோராக இந்தியர்கள் மிகப்பெரிய மற்றும் வேகமான வளர்ச்சி அடைந்துள்ளதனர்" என்றும் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications