உலக சாதனை படைத்த விஞ்ஞானிகள் எல்லாம் அரசுப் பள்ளியில் படித்தவர்களே.! பெருமிதம் கொள்ளுங்கள்.!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குக் கைமாற்றம் செய்யும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை, கோவை, கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சைக்கிள் பேரணி.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குக் கைமாற்றம் செய்யும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை, கோவை, கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சைக்கிள் பேரணி நடத்தினர்.

மாணவர் சங்கத்தினர் நடத்திய சைக்கிள் பேரணி
கோவையில் மாணவர் சங்கத்தினர் நடத்திய சைக்கிள் பேரணியை, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கொடி அசைத்துத் துவங்கி வைத்தார். காந்திபுரத்தில் துவங்கிய பேரணி 6 நாட்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் வழியாகத் திருச்சி சென்றடைகிறது.

அரசுப் பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள்
சைக்கிள் பேரணியைத் துவக்கி வைத்த மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது,"அமெரிக்கா, ரஷ்யா போன்ற உலக நாடுகளால் செய்ய முடியாத பல சாதனைகளை, அரசுப் பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டி இருக்கின்றனர்" என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்
எனவே அரசுப் பள்ளிகளைப் பெற்றோர்கள் ஏளனம் செய்யாமல் தங்களின் பிள்ளைகள் கல்வி பயில அனுப்புங்கள் எனவும், அரசுப் பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் இடங்களை அரசாங்கம் நிரப்ப வேண்டும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

அதுதான் நமது தமிழ்நாட்டிற்கே பெருமை
அடுத்த தலைமுறையும் அன்னைத்தமிழில் கல்வி பயில்வதை நாம் ஊக்குவிக்க வேண்டும். அதுதான் நமது தமிழ்நாட்டிற்கே பெருமை என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications