Just In
- 6 min ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- 28 min ago 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- 2 hrs ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 3 hrs ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
Don't Miss
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உலகின் முதல் 'கடல் தேவதை' தாவரம்..யாரும் அறிந்திராத பிரமிக்க வைக்கும் உண்மை..
இந்திய விஞ்ஞானிகள் 'கடல் தேவதை' என்ற புதிய தாவர இனங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவின் அந்தமான் தீவுக்கூட்டத்தில் ஒரு புதிய தாவர இனத்தை இந்திய விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இந்த தாவரத்தை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் இதன் மூலக்கூறு கட்டமைப்புகளைக் கண்டு வியந்துவிட்டனர். அப்படி என்ன புதுமையான விஷயத்தை விஞ்ஞானிகள் இந்த தாவரத்தில் கண்டனர் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
கடல் தேவதை என்று அழைக்கப்படும் புதிய தாவரம்
உண்மையைச் சொல்லப் போனால் கடல் தேவதை என்று அழைக்கப்படும் இந்த புதிய தாவர வகை கடந்த 2019 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தமான் தீவுக்கான பயணத்தின் போது உயிரியலாளர்கள் விசித்திரமான கடல் பச்சை ஆல்கேவைக் கண்டறிந்தனர். இதன் தோற்றம் தான், விஞ்ஞானிகளை முதலில் ஈர்த்துள்ளது. பின்னர், இதை ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்று விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
தாவரத்தின் இனத்தை அடையாளம் காண இரண்டு ஆண்டுகளா?
இந்த புதிய தாவரத்தின் இனத்தை அடையாளம் காண்பது என்பது விஞ்ஞானிகளுக்கு மிகவும் கடினமான சவாலாக அமைந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தாவரத்தின் மீது நடத்தப்பட்ட சோதனைகளில், இந்த தாவரத்தின் இனம் இது தான் என்று முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தவே விஞ்ஞானிகளுக்குக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டது என்று சமீபத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசிடபுலேரியா ஜலகன்யாகே என்று பெயரிட்ட விஞ்ஞானிகள்
ஏறக்குறைய நான்கு தசாப்தங்களில் தீவுகளில் உள்ள பாசி இனங்களில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் விசித்திரமான புதிய கண்டுபிடிப்பு இது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த தாவரத்திற்கு அசிடபுலேரியா ஜலகன்யாகே (Acetabularia jalakanyakae) என்று பெயரிட்டுள்ளனர். இந்த பெயருக்கான காரணம் குறித்து பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
மெர்மெய்ட் (mermaid)' என்ற பெயருக்கான அர்த்தம் என்ன?
சமஸ்கிருதத்தில் ஜலகன்யகா என்றால் 'மெர்மெய்ட் (mermaid)' என்று அர்த்தமாம். அதாவது, தமிழில் இதற்குக் கடல்களின் தெய்வம் அல்லது கடல் தேவதை என்று பொருள். டேனிஷ் எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சனின் பெயரிடப்பட்ட விசித்திரக் கதையில் லிட்டில் மெர்மெய்ட் என்ற கற்பனையான கதாபாத்திரத்தோடு இந்த தாவரத்தை இணைத்துப் பார்த்ததாகப் பெயரிட்ட விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தேவதையின் குடைகள் போல தோற்றமளிக்கும் தாவரம்
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தாவரத்தின் இனங்கள் விஞ்ஞானிகளை மிகவும் பிரமிக்க வைத்துள்ளது. இது ஒரு தேவதையின் குடைகள் போலச் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்ட தொப்பிகளைக் கொண்டுள்ளது என்று ஆய்வுக்குத் தலைமை தாங்கிய டாக்டர் பெலிக்ஸ் பாஸ்ட் கூறியுள்ளார். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினங்களின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த ஆலை கருவுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட கலத்தால் ஆனது.
ஒரே செல் உடன் கூடிய ஒற்றை நியூக்ளியஸ்
அதாவது இதன் மூலக்கூர் கட்டமைப்புகளில் ஒரு பிரமாண்டமான ஒரே செல் உடன் கூடிய ஒற்றை நியூக்ளியஸ் அமைப்பைக் கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாவரத்தின் இனத்தை அடையாளம் காண விஞ்ஞானிகள் 18 மாதங்களுக்கும் மேலாகத் தாவரத்தின் டிஎன்ஏவை வரிசைப்படுத்தி ஆய்வகத்தில் உள்ள மற்ற தாவரங்களுடன் அதன் வடிவத்தை ஒப்பிட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த டிவிஸ்ட நாமளே எதிர்பார்க்கல.! இவ்வளவு குறைவான மலிவு விலையில் புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அருமையான கடல் வளம்
இந்த கண்டுபிடிப்பை விவரிக்கும் ஒரு கட்டுரை இந்திய ஜர்னல் ஆஃப் ஜியோ-மரைன் சயின்சஸ் இதழில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உலகில் கடைசியாக மீதமுள்ள ஆரோக்கியமான பவளப்பாறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாறைகள் ஆல்கேவின் பன்முகத்தன்மை உட்படப் பல உயிரினங்களை ஆதரிக்கின்றன.
கடலில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது.. இது ஆபத்தா?
இருப்பினும், அதிகரித்து வரும் கடல் நீர் வெப்பநிலை காரணமாகப் பெருங்கடல்களின் இயல்புத் தன்மை மாறி, அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் கடல் வளம் சீரழியும் நிலை உருவாகிவருவது மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்குகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கடல் நீரின் ஆக்ஸிஜன் செறிவுத் தன்மை என்ன ஆனது?
உயரும் கடல் நீரின் வெப்பநிலை காரணத்தினால், நீரில் உள்ள ஆக்ஸிஜணின் செறிவுத் தன்மை குறைக்கப்படுகிறது. இதனால் கடலில் உயிர் வாழும் அனைத்து இனங்கள் உட்பட ஆக்ஸிஜனை நம்பியிருக்கும் அனைத்து உயிரினங்களையும் இது ஆபத்தான முறையில் பாதிக்கவிருக்கிறது என்று டாக்டர் பாஸ்ட் கூறியுள்ளார். மக்கள் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது மற்றும் அளிக்காமல் இருப்பதன் மூலம் இந்த சிக்கல்களில் இருந்து பூமியைக் காப்பாற்ற இயலும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470