பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக்.! நடந்தது என்ன?
ட்விட்டரின் கணக்குகள் ஹேக் செய்யவது இப்போது தொடர்கதை ஆகிவிட்டது என்றுதான் கூறவேண்டும்,சில வாரங்களுக்கு முன்பு பல்வேறு பிரபலங்கள் மற்றும் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பின்பு இயல்பு நிலைக்கு திரும்பின. இந்நிலையில் பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ வலைத்தளமான narendramodi_in ட்விட்டர் கணக்கு வியாழக்கிழமை அதிகாலை 3:15 மணியளவில் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக Bitcoin ஐ ஹேக்கர் கோரினார், இந்த கணக்கில் பிரதமருக்கு25லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர், பிரதமர் தேசிய நிவாரண நிதியத்தில் கிரிப்டோ நாணயம் மூலம் ஹேக்கர்கள் ட்வீட் செய்து நன்கொடைகளை கோரினர். இருப்பினும், பின்னர் கணக்கு மீட்கப்பட்டது.

பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் ஒரு செய்தி கொரோனா உருவாக்கப்பட்ட பிரதமர் மோடி நிவாரண நிதிக்குநன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பின்பு மற்றொரு ட்வீட்டில் இந்த கணக்கை ஜான் விக் ([email protected]) ஹேக் செய்ததாக ஹேக்கர் எழுதினார். நாங்கள் பேடிஎம் மால்-ஐ ஹேக் செய்யவில்லை, இருப்பினும், இப்போது இந்த ட்வீட்டுகள் நீக்கப்பட்டன.

பின்பு ட்விட்டர் இது குறித்து அறிந்திருப்பதாகவும் கணக்கைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி அவர்களின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்குக்கு எந்ம
பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அந்த கணக்கை சுமார் 61மில்லியன் மக்கள் பின் தொடருகின்றனர் என்றும் தகவல்வெளிவந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் உள்ளிட்ட முக்கியமான பலரின் ட்விட்டர் கணக்குகளை கடந்த ஜூலை மாதம் ஹேக் செய்த பின்னர், இப்போது இந்நிகழ்வும் ட்விட்டர் பயனர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

அன்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே ஆண்ட்ராய்டு தளங்களில் ட்விட்டர் செயலியை பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் சார்பில் எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டது. வெளிவந்த எச்சரிக்கை தகவலின் படி பயனர்கள் உடனே தங்களது ட்விட்டர் செயலியை அப்டேட் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு குறைபாடு பெரும்பாலும் ஆண்ட்ராய்டு 8 மற்றும் 9 வெர்ஷன்களில் உள்ள ட்வட்டர் செயலியை பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு குறைபாடு பயனர்களின் டிஎம் அதாவது தனிப்பட்ட குறுந்தகவல் விவரங்களை அமல்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தபோதிலும் இவற்றாறு நடந்ததற்கு எந்த ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications