Home
News

ட்ரோன் மூலம் தபால்கள் டெலிவரி: இந்திய அஞ்சல் துறை அசத்தல்.!

சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் சொல்லாக ட்ரோன்கள் மாறியுள்ளது. குறிப்பாக இதை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்தியாவிலும் ட்ரோன்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உள்ள அதிநவீன ட்ரோன்கள் மிகவும்

இப்போது உள்ள அதிநவீன ட்ரோன்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ட்ரோன்கள் பயன்படுத்திபார்சல்களை டெலிவரி செய்துள்ளது இந்திய தபால் துறை. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மாநிலம் கட்ச் மாவட்டத்தில்

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் தொலைத்தொடர்பு துறையின் உதவியுடன் ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் திட்டம் சோதனை முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது தபால் பணியாளர்கள், ஹபே கிராமத்தில் இருந்து நெர் கிராமத்துக்கு ட்ரோன் மூலம் மருந்துகள் அடங்கியபார்சலை அனுப்பியுள்ளனர்.

 இந்த இரண்டு இடங்களுக்கும்

குறப்பாக இந்த இரண்டு இடங்களுக்கும் இடையேயான 46 கி.மீ தொலைவை சுமார் 25 நிமிடங்களில் கடந்து உரிய இடத்தில் பார்சலை சேர்த்திருக்கிறது ட்ரோன். அதேபோல் ட்ரோன்களை பயன்படுத்துவதன் மூலம் தபால்களை மிக விரைவில் கொண்டு சேர்க்க முடியும்.

இந்த சோதனை திட்டத்தில் ட்ரோன்கள்

பின்பு இந்த சோதனை திட்டத்தில் ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் போதும் ஏற்படும் செலவுகள், இரண்டு இடங்களுக்கு இடையேயான புவியியல்அமைப்பு, பணியாளர்களின் ஒருங்கிணைவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்துள்ளனர். தாபல் துறையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மிகவும்பயனுள்ள வகையில் இருக்கும்.

மாநிலங்களுக்கான தொலைத்தொடர்பு

மேலும் மாநிலங்களுக்கான தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தேவுசின் சௌகன் அவர்கள் இந்த சோதனை வெற்றிகரமான முடிந்தது என்றும்,
ட்ரோன், மருந்துகள் அடங்கிய பார்சலை 46 கி.மீ தூரத்தில் உள்ள இடத்திற்கு 30 நிமிடங்களில் கொண்டு சேர்த்தது என்றும் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

மர் நரேந்திர மோடி மிகப்பெரிய

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவைத் தொடங்கிவைத்துப் பேசினார், அதில் விவசாயம், விளையாட்டு, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மையில் ட்ரோன் உபயோகிப்பது அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக அதிநவீன ட்ரோன்கள்இயற்கை பேரிடர்களில் பெருமளவு கைகொடுத்து வருகின்றன. பின்பு பாதுகாப்பு பணிகளிலும் இது போன்ற ட்ரோன்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Indian Postal Service delivering mails by drone: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X