Just In
- 13 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 17 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 17 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 18 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
விமர்சித்தால் தேச விரோதியா? இதான் பாசிசம்.. மோடி குறித்த பிபிசி ஆவணப்பட தடைக்கு வெற்றிமாறன் கண்டனம்
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Movies
36 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்..ஜெயிலர் மாஸ் அப்டேட்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ட்ரோன் மூலம் தபால்கள் டெலிவரி: இந்திய அஞ்சல் துறை அசத்தல்.!
சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் சொல்லாக ட்ரோன்கள் மாறியுள்ளது. குறிப்பாக இதை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்தியாவிலும் ட்ரோன்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இப்போது உள்ள அதிநவீன ட்ரோன்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் ட்ரோன்கள் பயன்படுத்திபார்சல்களை டெலிவரி செய்துள்ளது இந்திய தபால் துறை. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் தொலைத்தொடர்பு துறையின் உதவியுடன் ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் திட்டம் சோதனை முயற்சிமேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது தபால் பணியாளர்கள், ஹபே கிராமத்தில் இருந்து நெர் கிராமத்துக்கு ட்ரோன் மூலம் மருந்துகள் அடங்கியபார்சலை அனுப்பியுள்ளனர்.

குறப்பாக இந்த இரண்டு இடங்களுக்கும் இடையேயான 46 கி.மீ தொலைவை சுமார் 25 நிமிடங்களில் கடந்து உரிய இடத்தில் பார்சலை சேர்த்திருக்கிறது ட்ரோன். அதேபோல் ட்ரோன்களை பயன்படுத்துவதன் மூலம் தபால்களை மிக விரைவில் கொண்டு சேர்க்க முடியும்.

பின்பு இந்த சோதனை திட்டத்தில் ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் போதும் ஏற்படும் செலவுகள், இரண்டு இடங்களுக்கு இடையேயான புவியியல்அமைப்பு, பணியாளர்களின் ஒருங்கிணைவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்துள்ளனர். தாபல் துறையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மிகவும்பயனுள்ள வகையில் இருக்கும்.

மேலும் மாநிலங்களுக்கான தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தேவுசின் சௌகன் அவர்கள் இந்த சோதனை வெற்றிகரமான முடிந்தது என்றும்,
ட்ரோன், மருந்துகள் அடங்கிய பார்சலை 46 கி.மீ தூரத்தில் உள்ள இடத்திற்கு 30 நிமிடங்களில் கொண்டு சேர்த்தது என்றும் ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவைத் தொடங்கிவைத்துப் பேசினார், அதில் விவசாயம், விளையாட்டு, பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மையில் ட்ரோன் உபயோகிப்பது அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக அதிநவீன ட்ரோன்கள்இயற்கை பேரிடர்களில் பெருமளவு கைகொடுத்து வருகின்றன. பின்பு பாதுகாப்பு பணிகளிலும் இது போன்ற ட்ரோன்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470