சமூகவலைத்தளம் மூலம் பழகி அமெரிக்கா சிறுமியை பலாத்காரம் செய்த இந்தியர் கைது.!
11 வயது சிறுமியை சமூகவலைத்தளம் மூலம் பழகி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியூயார்க்: நியூயார்க் பஃப்ஃபளோ சிட்டியில் வசிக்கும் சச்சின் பாஜி பாஸ்கர் என்ற 22 வயது இந்தியர் இன்று அமெரிக்கா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் 11 வயது சிறுமியை சமூகவலைத்தளம் மூலம் பழகி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 250,000 டாலர் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.

சச்சின் பாஜி பாஸ்கர்
கடந்த ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளம் மூலம் 15 வயது என்று சொல்லப்பட்ட, உண்மையில் வெறும் 11 வயதே ஆனா அந்தப் சிறுமியை சச்சின் பாஜி பேசி, பழகி அவரை நேரில் சந்தித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா உதவி அட்டர்னி வெய் ஜியாங் தெரிவித்துள்ளார்.

நேரில் வீட்டுக்கே சென்று
சமூக வலைத்தளம் மூலம் அந்தச் சிறுமியுடன் பழகி, அவரின் பெற்றோருக்கே தெரியாமல் அவரின் வீட்டுக்கே சென்று அந்தச் சிறுமியை தனது காரில் பிக்கப் செய்திருக்கிறார் சச்சின் பாஜி.

காரில் அழைத்துச் சென்று பலாத்காரம்
தனது காரில் அந்தச் சிறுமையை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து மறுபடியும் 3 மணி நேரம் கழித்து அவளின் வீட்டிலேயே ட்ராப் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

10 ஆண்டு கடுங்காவல் தண்டனை
11 வயது மைனர் சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சச்சின் பாஜி அமெரிக்கா போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டு அமெரிக்கா உயர் நீதிபதி கென்னத் ஸ்கர்ட்டர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். சச்சின் பாஜிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 250,000 டாலர் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications