இனி ஆன்லைனில் ஆடர் செய்தால் வீடு தேடி வரும் பெட்ரோல்.!
இந்தியாவில் முதல் முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை செய்யும் முறையை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த துவங்க விழா சென்னை கொளத்தூரில் நடந்தது.
நடுரோட்டிலும், நடுகாட்டிலும் பெட்ரோல் பங்க் இல்லாத இடங்களில் பெட்ரோல் தீர்ந்து போனால் கடினம் தான்.

சாலையோரங்களில் கன ரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் ஆயில் இல்லாமல் நின்றால், நாம் டீசல் அல்லது பெட்ரோலை தேடி அலைவோம்.
இத்தனை நாட்களாக நாம் ஆயில் தேடி எல்லாம் அலைந்து திரிந்த நமக்கு தற்போது, விடிவு காலம் பிறந்துள்ளது எனலாம். தற்போது டீசல் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதல் முறை:
இந்தியாவில் முதல் முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை செய்யும் முறையை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த துவங்க விழா சென்னை கொளத்தூரில் நடந்தது.

இந்தியன் ஆயில்:
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் சார்பில் சென்னையில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு , அதிகாரிகள் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

200 லிட்டர் பெற முடியும்:
ஆன்லைனில் டீசல் ஆடர் செய்வோருக்கு குறைந்தபட்சம் 200 லிட்டர் டீசல் பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

2500 லிட்டருக்கு மேல்:
2500 லிட்டருக்கு மேல் டீசலை ஆடர் செய்வோருக்கும் கட்டாயம் வழங்கப்படும். ஆனால் அவர்கள் டீசல் சேமிப்பு வைத்திருப்பதற்கான உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

விரைவில் பெட்ரோல்:
இந்த சேவையில் தற்போது, டீசல் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பெட்ரோலும் அறிமுகம் செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகன ஓட்டிகள் அலாதி குஷி:
டீசலை தொடர்ந்த பெட்ரோலும் ஆன்லைனில் ஆடர் செய்யும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளதால், வாகன ஓட்டிகள் தற்போது குஷியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications