சூப்பர் பவர் நாடுகளை 'நடுங்க வைக்கும்' இந்தியா..!!
உலகின் நான்காவது பெரிய ராணுவமாக இந்திய ராணுவம் திகழ்கின்றது. இதோடு உலகின் அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதிலும் இந்திய ராணுவம் முன்னிலை வகிக்கின்றது.
ஆண்டிற்கு சுமார் $46 பில்லியன் டாலர் செலவழித்து இந்திய ராணுவமானது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை விட அதி நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை தயாரித்து வருக்கின்றது.
அதி நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் உலகின் முன்னணி நாடாக இந்தியா இருக்கின்றது. அந்த வகையில் இந்திய ராணுவத்திற்காக சமீபத்தில் வாங்கப்பட்ட மற்றும் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட சில அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

பினாகா
இந்தியாவால் தயாரிக்கப்பட்ட பினாகா வெறும் 44 நொடிகளில் 12 ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டிருப்பதோடு 4 நிமிடங்களில் மீண்டும் ஏவுகணைகளை ஏற்றுவும் செய்யும்.

பினாகா
கணினி, மோஷன் மற்றும் ரோடேஷன் போன்ற சென்சார்களை பயன்படுத்தும் இனெர்ஷியல் நேவிகேஷன் சிஸ்டம் மூலம் ஆட்டோணோமஸ், ஸ்டான்டு-அலோன், ரிமோட் மற்றும் மேனுவல் போன்ற மோடுகளில் இயங்கும் திறன் கொண்டிருக்கின்றது.

டி-90எஸ் பிம்ஸா
ரஷ்யா தயாரித்த இவ்வகை டேன்கர்களில் மேம்படுத்தப்பட்ட ஜாமர் சிஸ்டம், லேசர் வார்னிங் ரிசீவர் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றது.

டி-90எஸ் பிம்ஸா
48,000 கிலோ எடை கொண்ட பிம்ஸா டேன்கர் 1600 லிட்டர் எறிவாயு மற்றும் நீரில் 5 மீட்டர் ஆழம் வரை கடக்க முடியும். 125 எம்எம் 2ஏ46எம் ஸ்மூத்போர் துப்பாக்கி மற்றும் 12.7 எம்எம் இயந்திர துப்பாக்கியும் கொண்டிருக்கின்றது.

ஐஎன்எஸ் விக்ரமாதித்தயா
இந்திய கடற்படையின் விலை உயர்ந்த விமானம் தாங்கி கப்பல், 45,000 கிலோ எடை கொண்டிருக்கின்றது. இதில் 24 MiG-29K போர் விமானங்களும், 6 ASW/AEW ஹெலிகாப்டர்களையும் தாங்க முடியும்.

ஐஎன்எஸ் விக்ரமாதித்தயா
ரேடார்களால் ட்ராக் செய்ய முடியாத சென்சார்களை கொண்டிருக்கும் ஐஎன்எஸ் விக்ரமாதித்தயா போர் கப்பலினை ரஷ்யாவிடம் இருந்து சுமார் 2.35 பில்லியன் டாலர்களை கொடுத்து இந்தியா வாங்கியது.

நாக் மிஸ்ஸைல் மற்றும் நமிகா
ரூ.3 பில்லியன் செலவில் தயாரிக்கப்பட்ட நாக் இந்தியாவால் கட்டமைக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் ஆன்டி டேன்க் ஏவுகணை என்றழைக்கப்படும் நாக் முழுவதும் ஃபைர்கிளாஸ் அமைப்பு கொண்டிருக்கின்றது.

நமிகா
இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பம் பயன்படுத்தும் நாக் 12 ஏவுகணைகளை தாங்கி கொண்டு 8 ஏவுகணைகளை தாக்க தயாராகவும் வைக்கும் திறன் கொண்டிருக்கின்றது.

ஃபால்கன் AWACS
AWACS என்றால் தொலைதூரத்தில் இருக்கும் விமானம், கப்பல் மற்றும் வாகனங்களை கண்டறிய பயன்படுத்தப்படும் அமைப்பாகும். இந்திய விமானப்படையானது உலகின் அதிநவீன AWACS அமைப்பை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபால்கன்
வான்வெளி சண்டையின் போது கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் AWACS ஈ-3 சென்ட்ரி விமான வகைகளை விட பத்து மடங்கு வேகமாக செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications