இதுதான் உலகின் முதல் புல்லட் ப்ரூஃப் ஹெல்மட்.! இராணுவ கல்லூரி அசத்தல்.!
தற்சமயம் இந்தியா இராணுவத்தின் இராணுவ பொறியியல் கல்லூரி உலகின் முதல் புல்லட் ப்ரூஃப் ஹெல்மட்டை உருவாக்கியதன் மூலம் சாதனைப் படைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக AK-47 புல்லட்டை 10 மீட்டரிலிருந்து தடுக்கும் உலகின் முதல் ஹெட்மட்டை தான் இந்த ராணுவ பொறியியல் கல்லூரி
உருவாக்கியுள்ளது.

1.4கிலோ எடை
அதன்படி உத்தரபிரதேசத்தின் லக்னோவில் டெஃப்எக்ஸ்போ 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ரக ஹெல்மட் 1.4கிலோஎடையுள்ளதாக செயதி நிறுவனம் யுNஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் முதல் மற்றும் உலகின் மலிவான துப்பாக்கிச் சூடு இருப்பிடத்தையும் இந்த கல்லூரி உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒரு கூட்டு முயற்சியில், கல்லூரியின் இந்த புதிய கண்டுபிடிப்பு புல்லட்டின் சரியான இடத்தை 400மீட்டர் தூரத்தில் இருந்து கூட கண்டுபிடிக்க முடியும். மேலும் இது பயங்கரவாதிகளை விரைவாக கண்டுபிடித்து நடுநிலையாக்க உதவும்.

உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி
டெஃப்எக்ஸ்போவின் 11-வது பதிப்பு இந்தியாவின் இரு ஆண்டு இராணுவ கண்காட்சி ஆகும். அது உலகளாவிய பாதுகாப்புஉற்பத்தி மையமாக நாட்டின் திறனை வெளிப்படுத்த முயல்கிறது. மேலும் இது இந்தியாவின் மிகப்பெரியபாதுகாப்பு கண்காட்சி தளமாகவும்,உலகின் சிறந்த டெஃப்எக்ஸ்போவாகவும் மாறிவிட்டது.

150 நிறுவனங்கள்
இந்த முறை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 150 நிறுவனங்கள் இந்த எக்ஸபோவின் ஒரு பகுதியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2024-ம் ஆண்டளவில் 5பில்லியன் அமெரிக்க டாலர் பாதுகாப்பு ஏற்றுமதியை எட்டுவதற்கான இலக்கை அடைந்துவருவதாக வலியுறுத்தி, டெஃப்எக்ஸ்போவில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஐந்து பில்லியன் டாலர்
கடந்த 2018-2019ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.10,745கோடியாக இருந்தது, ஆனால் இது 2016-17 ஆம் ஆண்டில் ஏற்றுமதியின் ஏழு மடங்கு ஆகும். குறிப்பாக இந்த பாதுகாப்பு கண்காட்சியின் வெற்றியைக் கண்ட 2024-ம் ஆண்டில் பாதுகாப்பு ஏற்றுமதியில் ஐந்து பில்லியன் டாலர் இலக்கை அடைவோம் என்று கூறியுள்ளார் அமைச்சர். மேலும் இந்த டெஃப்எக்ஸ்போவின் போது இதுவரை 200ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications