வாட்ஸ்ஆப் போன்ற செயலியை உருவாக்கும் இந்திய அரசு!
சமூக வலைத்தளங்கள் இந்தியர்களின் வாழ்வின் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டநிலையில், குறிப்பாக பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ்ஆப் இந்தியாவில் 220மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ளது.

கவலைக்குரிய விசயமாக இருக்கலாம்
நிச்சயமாக இதில் அரசாங்க அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அடங்குவர். இது ஒரு கவலைக்குரிய விசயமாக இருக்கலாம். குறைந்தபட்சம் இது தான் தற்போது இந்திய அரசாங்கத்திற்குள் நிலவிவரும் கவலையாக இருப்பதால், அலுவல் ரீதியான தகவல்தொடர்புகள் மற்றும் உரையாடல்களுக்கு வாட்ஸ்அப் போன்ற மாற்று செயலியை உருவாக்க விரும்புகிறது.

அமெரிக்க-சீனா
தற்போதைய அமெரிக்க-சீனா வர்த்தகப் போரின் காரணமாக, கூகுள் மற்றும் குவால்காம் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சீன தொழில்நுட்ப நிறுவனமான காங்குலோமெரேட் ஹவாய் உடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இது நமது அரசாங்கத்திற்கு உள்ளாக ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது.

வாட்ஸ்அப்பின் தேவை
இதன் காரணமாக உள்நாட்டு அல்லது குறைந்தபட்சமாக அரசு வாட்ஸ்அப்பின் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் மற்றும் அதன் நிறுவனங்களின் அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளும் பகிரப்பட வேண்டும். மற்றும் வேறு எந்த தளங்களிலும் அவை பகிரப்படக்கூடாது.

நம் நாட்டிற்கு உள்ளேயே இருப்பது உறுதிசெய்யப்படும்
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் போன்ற மாற்று செயலியின் மூலம் அனைத்து உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளையும் மாற்றுவதற்கு இந்திய அரசாங்கத்தின் மற்றொரு காரணம் என்னவென்றால், அதன் மூலம் அனுப்பப்படும் அனைத்து தரவுகளும் 100% நம் நாட்டிற்கு உள்ளேயே இருப்பது உறுதிசெய்யப்படும். நமது தேசத்தின் பாதுகாப்பிற்கு இது மிகவும் முக்கியமானது.

, சீனா மற்றும் வட கொரியா
இந்தியா முன்மொழிகின்ற இது தீவிரவாதமான ஒன்றல்ல, இது விவேகமானது என்பதை அறிவது மிக முக்கியம் . குறிப்பாக பிரான்ஸ், சீனா மற்றும் வட கொரியா போன்ற பிற வெளிநாட்டு அரசாங்கங்கள் பயன்படுத்தும் செயலிகள் மற்றும் கருவிகள், மற்ற பொதுமக்கள் இணையம் முழுவதிலும் பயன்படுத்துபவற்றில் இருந்து முற்றிலும் வேறானவை.

விற்பனையாளர்களிடம் இருந்து தள்ளியிருக்க வேண்டும்
அரசாங்கத்தின் இறுதியான திட்டம் என்னவெனில், வெறும் வாட்ஸ்ஆப்-க்கு மாற்று என்பதை காட்டிலும், மின்னஞ்சல், கணினி-கணினி தகவல்தொடர்பு போன்ற பல அம்சங்களை அந்த செயலியில் இணைத்து, ஜிமெயில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் போன்ற வெளிநாட்டு தொழில்நுட்ப விற்பனையாளர்களிடம் இருந்து தள்ளியிருக்க வேண்டும் என்பதே இலக்கு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய நலனுக்காக..
தனது சொந்த தேசிய நலனுக்காக, இந்திய அரசாங்கமும், தொடர்புடைய நிறுவனங்களும் இந்தியாவிற்கு வெளியே உருவாக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும் தொழில்நுட்பகள் மீதான நம்பகத்தன்மையை இழக்கவேண்டிய தருணம் இது.மேலும் அலுவல்ரீதியான நோக்கங்களுக்காக வாட்ஸ்ஆப் போன்ற மாற்றுசெயலியை உருவாக்கும் முயற்சியின் இந்த முதல் படி அந்த திசையில் ஒரு வரவேற்கப்படவேண்டிய நடவடிக்கை ஆகும்.


Click it and Unblock the Notifications