விமானங்களில் வை-பையை அனுமதிக்க இந்திய அரசு திட்டம்..!
விமானங்களில் இணைய அணுகல் அனுமதிக்காத்த சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. இந்த பிரச்சனையை விரைவில் தீர்க்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 10 நாட்களில் விமானங்களில் வை-பை வசதி வரலாம் என்ற ஒரு சாதகமான முடிவை எதிர்பார்க்கலாம்.

இந்த விடயம் சார்ந்த ஒரு நல்ல முடிவை அரசு துறைகள் மேற்கொண்டு வருகிறது, ஒரு பரந்த புரிதலில் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்று கருத்து கூறியுள்ளார் விமான போக்குவரத்து செயலாளர் ஆர்.என் சவ்பே.

இதுவரையிலாக இந்த வைபை வசதி சார்ந்த அக்கறை இல்லாமல் இருந்தது முற்றிலும் இந்திய விமான போக்குவரத்து துறை தானே தவிர அரசாங்க குறுக்கீடுகள் அல்ல என்பதும், வெளிநாட்டு விமான நிறுவனங்களில் இணைய அணுக்கள் இருக்கலாம் ஆனால் அவர்களால் ஒரு உள்ளூர் சர்வர் இருந்தால் மட்டுமே வை-பை சேவையை வழங்க அனுமதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்கறையின்மை யாருடையதாக இருப்பினும் சரி இந்திய விமானங்களில் வை-பை சேவை பயன்படுத்த முடியும் என்றால், அது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை, முக்கியமாக அவசர சூழ்நிலைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்க முடியும்.


Click it and Unblock the Notifications