முதல்ல திருமணம், அப்புறம் வியாபாரம் - இது தான் இப்போ ட்ரென்டு
நிறைய தம்பதிகள் கல்லூரியில் நண்பர்களாக பழகி பின்னர் திருமணம் செய்து கொள்கின்றனர், சிலர் திருமணத்தோடு நிற்காமல் புதிய வியாபாரமும் துவங்குகின்றனர்.
கீழே வரும் ஸ்லைடர்களில் திருமணம் முடித்த கையோடு புதிய நிறுவனங்களை துவங்கி வெற்றி பெற்ற இந்திய தம்பதிகளின் பட்டியலை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..

செயற்கை நுண்ணறிவு நிறுவனம்
ஆனந்த் சந்திரசேகரன் மற்றும் அஸ்வினி அசோகன் தம்பதியர் திருமணம் முடித்த கையோடு மேட் ஸ்ட்ரீட் டென் என்ற நிறுவனத்தை துவங்கினர்.

திருமணம்
ஆனந்த் மற்றும் மெஹாக் ஜோடி திருமணம் முடித்த இரு ஆண்டுகளுக்கு பின் வெட்மீகூட் என்ற நிறுவனத்தை துவங்கினர்.

ஸ்வீட் இன்பாக்ஸ்
தற்சமயம் இந்தியா முழுவதும் 10 நகரங்களில் செயல்படும் இந்நிறுவனம் இந்தாண்டின் முடிவில் சுமார் 50 நகரங்களில் விரிவாக்கப்படும் என்று தெரிகின்றது.

ஜிக்ஸ்டார்ட்
அதித் ஜெயின் மற்றும் மதுலிகா பான்டே தம்தியினர் இணைந்து ஜிக்ஸ்டார்ட் என்ற நிறுவனத்தை துவங்கினர்.

மொபிஃபோலியோ
மொபைல் செயலிகளை தயாரிக்கும் இந்நிறுவனம் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.

எரிஸ்டோனா
கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் போலி நகைகளை தயாரித்து வருகின்றது.

கேஷ்கரோ
ரோஹன் மற்றும் ஸ்வாதி பார்கவா ஜோடி கேஷ்கரோ என்ற இணையத்தின் இணை நிறுவனர்கள் ஆவர்.

யாஸனா
அபர்னா மற்றும் நவின் பார்கவா ஜோடி யாஸனா என்ற நிறுவனத்தை 2013 ஆம் ஆண்டு துவங்கினர்.

விளம்பரம்
கவுதம் மற்றும் ப்ரமா சிங் தம்பதியினர் ஆக்மென்டெட் ரியால்டி மற்றும் மோஷன் சென்சிங் சார்ந்த விளம்பர நிறுவனத்தை நிறுவியுள்ளனர்.

சம்பேக்
வீட்டு உபயோக பொருட்கள் சார்ந்த இந்நிறுவனத்தை சுப்ரா மற்றும் விவேக் பிரபாக்கர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








