Jio, Airtel, Vi தலையில் துண்டு.. மக்களே இனி இன்டெர்ன்ட், டேட்டாயின்றி வீடியோ பார்க்கலாம்.. மத்திய அரசு முடிவு
இனி உங்கள் ஸ்மார்ட்போனில் (Smartphone) வீடியோ பார்க்க இன்டர்நெட் (Internet) அல்லது டேட்டா அல்லது சிம் (SIM) கார்டு போன்றவை தேவையில்லை என்கிறது இந்திய அரசு. விரைவில், டேட்டா தேவையின்றி வீடியோ பார்க்கும் டைரக்ட்-டு-மொபைல் (D2M) சேவையை இந்தியா அறிமுகம் செய்யவுள்ளது.
வீட்டுக்கு வீடு குறைந்தது 1 ஸ்மார்ட்போன், மூலைக்கு மூலை மொபைல் என்று மக்கள் அவர்களின் கையில் ஒரு மொபைல் போன் சாதனத்தை வைத்துள்ளனர். முன்பு ஒரு சிலர் கைகளில் மட்டும் பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் சாதனங்கள், இப்போது எல்லோரின் கைகளிலும் தவழ்கிறது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளையில், போன் மூலம் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், அதிகப்படியான டேட்டாவை மக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். வீட்டில் அமர்ந்து டிவி பார்ப்பவர்களின் எண்ணிக்கையை விட, போறபோக்கில் ஸ்மார்ட்போனில் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது.
சிம் கார்டு, இன்டர்நெட், டேட்டாயின்றி லைவ் வீடியோ பார்க்கலாமா? எப்படி?
உண்மையை சொல்ல போனால், வீட்டில் டிவி இருந்தாலும் கூட, சிலர் பெட்ரூமில் ஹாய்யாக படுத்துக்கொண்டு ஸ்மார்ட்போனில் தான் வீடியோ பார்க்கிறார்கள். இதை பல குடும்பங்களில் நாம் கண்கூடாக பார்க்கமுடிகிறது. இந்த அதிகப்படியான பயன்பாடு நெட்வொர்க்கில் அழுத்தத்தை உருவாக்குகிறது. இவை 5ஜி சேவைக்கான பெரியளவு இடத்தை நிரப்பிக்கொள்கின்றன.
இதனால், மத்திய அரசு மக்களுக்கு வீடியோ பார்க்கும் அனுபவத்தை இன்டர்நெட் சேவையின்றி, டேட்டாவின் தேவையின்றி முழுமையாக எந்தவொரு SIM கார்டு தேவையும் இல்லாமல் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனையை கூட இந்தியா விரைவாக துவங்கவுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் டிவைஸ்களில் சிம்கார்டு, இன்டர்நெட் வசதி இன்றி லைவ் வீடியோக்களை பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் என்று எந்த ஸ்மார்ட்போன் மாடலாக இருந்தாலும், இனி சிம்கார்டு, இன்டர்நெட் வசதி இன்றி லைவ் வீடியோ பார்க்க முடியும். இந்த திட்டத்தை டைரக்ட் டூ மொபைல் (டி2எம் அல்லது D2M) தொழில்நுட்பம் மூலம் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதுபற்றி சமீபத்தில் தகவல் மற்றும் ஒலிபரப்பு செயலர் அபூர்வ சந்திரா கூறியுள்ளார்.

சாங்க்யா லேப்ஸ் மற்றும் ஐஐடி கான்பூர் உதவியுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த டி2எம் தொழில்நுட்பத்தின் சோதனைகள் விரைவில் 19 நகரங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்காக 470-582 மெகா ஹெர்ட்ஸ் ஃபிரிக்வென்சியை இந்திய பயன்படுத்தவுள்ளது. இதன் மூலம் 25% முதல் 30% வரையிலான வீடியோ டிராஃபிக் குறைக்கப்படும்.
டைரக்ட் டூ மொபைல் (டி2எம்) அல்லது Direct-to-Mobile (D2M):
D2M சேவைக்கு ஸ்மார்ட்போன் வீடியோ பயன்பாட்டை மாற்றுவதன் மூலம் 5G நெட்வொர்க் சேவை மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் பரிணாம வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 280 மில்லியன் குடும்பங்கள் உள்ளன. இதில் வெறும் 180 மில்லியன் குடும்பங்களிடம் மட்டுமே டிவி இருக்கிறது.
ஆனால், இந்த மொத்த எண்ணிக்கையிலான குடும்பங்களில் குறைந்தது 1 ஸ்மார்ட்போனாவது இருக்கிறது. இவர்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அவர்களுடைய பெருமபலன நேரத்தை ஸ்மார்ட்போன் மூலம் வீடியோ பார்த்து செலவிடுகிறார்கள். இதனால், இன்டர்நெட் மற்றும் டேட்டா சேவையின் திறன் பாதிக்கப்படுகிறது. இவர்களை விரைவில் D2M சேவைக்கு மாற்றுவதன் மூலம், இந்திய இன்டர்நெட் நெட்வொர்க் மேம்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் D2M சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








