சத்தமில்லாமல் துருவாஸ்திரா ஏவுகணை சோதனை.! வெற்றி.! வீடியோ.!
இந்தியாவின் சக்திவாய்ந்த Anti-tank guided ஏவுகணை துருவாஸ்திர-வின் விமான சோதனைகள் அன்மையில் ஒடிசாவில் இருக்கும் இடைக்கால சோதனை வரம்பில்(ITR) வெற்றிகரமாக நடத்தப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் துருவாஸ்திர ஆண்டி டேங்க் கைடட் ஏவுகணை என்று பெயரிடப்பட்டுள்ளஹெலிகாப்டரில் ஏவப்பட்ட நாக் ஏவுகணையின் (HELINA) சோதனைகள் ஆனது கடந்த ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நேரடி மற்றும் மேல் முனை தாக்குதல் முறையில் நடத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டகாசமான சோதனை ஹெலிகாப்டர் இல்லாமல் நடத்தப்பட்டது என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

ஹெலினா என்று கூறப்படுவது மூன்றாம் தலைமுறை fire and forget class ஆண்டி டேங்க் கைடட் ஏவுகணை(ATGM) செயல்முறையாகும். இது மேம்பட்ட லைட் ஹெலிகாப்டரில் (ALH) பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தஅமைப்பு இரவு மற்றும் பகல் என அனைத்து வானிலைகளிலும் செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது வழக்கமான கவசங்கள் கொண்டும் வெடிக்கும் எதிர்வினை கவசங்கள் கொண்டும் போர்ட டேங்குகளை தோற்கடிக்கும் என்று
கூறப்படுகிறது. ஹெலினா ஏவுகணை நேரடி முறையிலும் மேலிருந்து தாக்கும் முறையிலும் இலக்குகளை அழிக்க முடியும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) கடந்த வருடம் போக்ரானில் NAG ஏவுகணைகளின் மூன்று வெற்றிகரமான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக 524 கோடி ரூபாய் செலவில் DRDO வடிவமைத்து உருவாக்கிய NAG ஏவுகணைஅமைப்பு (NAMIS) வாங்குவதற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல் அளித்த பின்னர் இது செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த அமைப்பில் மூன்றால் தலைமுறை ஆண்டி-டேங்கள் வழிகாட்டும் ஏவுகணை, NAG, மற்றும் ஏவுகணை கேரியர் வாகனம் (NAMICA) ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவத்தில் NAG ஏவுகணை வெற்றிகரமாக சேர்கப்பட்டுள்ளது, எனவே இது எதிரி தாக்குதலுக்கு எதிரான இராணுவத்தின் திறனுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
News Source: timesnownews.com


Click it and Unblock the Notifications