சீனாவும் பாகிஸ்தானையும் பதற வைத்த இந்திய போபர்ஸ் பீரங்கி.!
எல்லையில் அத்துமீறி வரும் சீனா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சமாளிக்க புதிய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. இதில் பல்வேறு அணு ஆயுதங்கள் வெளிநாடுகளிலும், இந்திய உள்நாட்டு தொழில்நுட்ப உதவியோடு தயாரிக்க
எல்லையில் அத்துமீறி வரும் சீனா-பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சமாளிக்க புதிய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. இதில் பல்வேறு அணு ஆயுதங்கள் வெளிநாடுகளிலும், இந்திய உள்நாட்டு தொழில்நுட்ப உதவியோடு தயாரிக்கப்பட்டு வருகின்றது.

தற்போது சீனாவும் ,பாகிஸ்தானையும் போபர்ஸ் பீரங்கி வைற வைத்துள்ளது. மேலும், அத்துமீறலுக்கும் தக்கபதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவின் நடவடிக்கைகள் அமைந்து வருகின்றது.

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான்:
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் இந்தியா மீது தனது வெறுப்புணர்வை காட்டி வருகின்றது. இதில், அவ்வபோது, இந்திய எல்லை பகுதிகள் அத்துமீறி நுழைந்தும் வருகின்றது. அந்நாட்டு தீவிரவாதிகளை ஊக்குவித்து இந்தியாவுக்கு எதிராக சண்டையிட வைத்தும் வருகின்றது.

அத்துமீறும் சீனா:
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றது. மேலும் இந்திய பகுதிகளை தனக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றது. அவ்வப்போது, இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைந்து, சீனா தனது பகுதிகளை முகாமிட்டு வருகின்றது.

அணு ஆயுதங்கள்:
எல்லையில் அத்துமீறும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் முடிவு கட்டும் விதமாக வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து அணு ஆயுதங்களை குவித்து வருகின்றது.
இதில் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் கிலி ஏற்பட்டுள்ளது.

போபர்ஸ் பீரங்கிகள்:
கடந்த 1989ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அரசால் ஸ்வீடன் நிறுவனத்திடம் ஆயிரத்து 437 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டவை போபர்ஸ் பீரங்கிகள் .

சர்ச்சை:
இந்த பீரங்கி பேரத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு 66 கோடி ரூபாய் அளவுக்கு ஆதாயம் அளிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்ததால் நீண்டகாலமாக போபர்ஸ் பீரங்கி பேரம் தொடர்பான வழக்குகள் நடைபெற்றன. ஆயினும் போபர்ஸ் பீரங்கிகளின் தரத்தில் குறையில்லை என்பதால் ஸ்வீடன் நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய தடை விதிக்கப்படவில்லை.

தகுதியற்ற தனுஷ்:
போபர்ஸ் பாணியிலான தொழில்நுட்ப முன் மாதிரியை வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனுஷ் பீரங்கிகள் சோதனையின் போது தகுதியற்றவையாக கருதப்பட்டன.

2020ம் ஆண்டில்:
இதன் தொழில்நுட்பத்தில் இருந்த பல்வேறு பிரச்னைகள் கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களாக தீர்க்கப்பட்டு இறுதியாக அதே வடிவிலான 114 பீரங்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதியளித்தது. இதற்கான சில உதிரிபாகங்கள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகின்றன.இதில் பதினெட்டு பீரங்கிகள் 2020ம் ஆண்டுக்குள் ராணுவத்தில் இணைக்கப்படுகின்றன.

போர்பர்ஸ் தனுஸ் பீரங்கி:
முதல் கட்டமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5 போபர்ஸ் வடிவிலான பீரங்கிகள் மின்னணு ரீதியாக தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தனுஷ் என்ற பெயரில் ஜபல்பூரில் உள்ள ராணுவ துப்பாக்கித் தயாரிப்பு தொழிற்சாலையில் மார்ச் மாத இறுதியில் இணைக்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications