ரூ.300 கோடியில் ஸ்பைல் குண்டு வாங்கும் இந்தியா: சீனாவும், பாகிஸ்தானும் கதறல்.!
இஸ்ரோலிடம் இருந்து ரூ.300 கோடியில் ஸ்பைல்ரக வெடிகுண்டுகளை வாங்க இந்தய விமானப்படை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த குண்டு எவ்வாறு எதிரிகளையும் இலக்குகளையும் துல்லியமாகவும் தாக்கி அழிக்கும் என்று தொழில்நுட
இஸ்ரோலிடம் இருந்து ரூ.300 கோடியில் ஸ்பைல்ரக வெடிகுண்டுகளை வாங்க இந்தய விமானப்படை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த குண்டு எவ்வாறு எதிரிகளையும் இலக்குகளையும் துல்லியமாகவும் தாக்கி அழிக்கும் என்று தொழில்நுட்ப ரீதியாக காணலாம்.

இந்த குண்டின் சிறப்பு அம்சமே பாலகோட் தீவிரவாதிகள் முகாம்கள் மீது துல்லியமாக தாக்குதலை நடத்த இந்த குண்டுகளை பயன்படுத்தியது. இதனால் பாகிஸ்தான், சீனா கதறுகின்றன.

ஸ்பைஸ் -2000 ரக குண்டு:
எதிரிகளின் பதுங்கு தளங்களை முற்றிலுமாக அழிக்கும் வெடிகுண்டுகளை வாங்க இந்திய விமானப்படை முடிவு எடுத்துள்ளது. பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது இந்திய விமானப்படை ஸ்பைஸ் -2000 ரக குண்டுகளை வீசியது. இந்த குண்டுகள் கட்டிட கூரைகளை துளைத்து உள்ளே விழுந்து 80 கிலோ வெடிபொருள்களை வெடிக்க வைத்தன.

உள்ளே இருப்போர் மட்டும் பலியாவர்கள்:
இந்த ரக குண்டுகளால் கட்டிடம் சேதம் அடையாது,உள்ளிருப்போர் மட்டுமே பலியாவார்கள்.
இதே நேரத்தில் இஸ்ரேல் தயாரிப்பான நவீனப்படுத்தப்பட்ட ஸ்பைஸ் -2000 ரக குண்டுகளை வாங்க இந்திய விமானப்படை முடிவு எடுத்துள்ளது.

பதுங்கு தளங்களை அடியோடு அழிக்கும்:
மார்க் -84 ரக முனை கொண்ட ஸ்பைஸ்-2000 ரக குண்டுகள் 429 கிலோ எடையும், 129 இன்ஞ்ச் நீளமும், 18 இன்ஞ்ச் விட்டமும் கொண்டவை. இந்த குண்டுகள் கட்டிடங்கள் மற்றும் பதுங்கு தளங்களை அடியோடு அழிக்கும் என்பதால் அவற்றை இஸ்ரேலிடம் இருந்து வாங்க உள்ளதாக விமானப்படை கூறியுள்ளது.

ரூ.300 கோடி மதிப்பு:
முப்படைகளும், 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை அரசு அனுமதி இன்றி வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில் புதிய குண்டுகளை வாங்க உள்ளதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.

பதறும் பாகிஸ்தான்-சீனா:
பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் அத்துமறீ தாக்குதல் நடத்துவதால், இதுபோன்ற பிரச்னையின் போது, இந்தியா இந்த வகையான குண்டுகளை பயன்படுத்தினால் , தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று பாகிஸ்தான், தீவிரவாதிகள் கதறுகின்றனர்.
மேலும் அத்துமீறி வரும் சீனாவை இந்தியா வாங்கும் இந்த நவீன குண்டுகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று சீனாவும் மற்றொரு புறம் அஞ்சிவருகின்றது.


Click it and Unblock the Notifications