Just In
- 57 min ago வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- 59 min ago அதிரவிட்ட அமேசான்.. டால்பி ஆடியோ.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. ஆஃபரில் Xiaomi டிவி.. எந்த மாடல்?
- 2 hrs ago ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- 3 hrs ago இனி Nokia இல்ல போரிங்.. 2 டிஸ்பிளே கொண்ட போனை அறிமுகம் செய்த HMD.. எந்த மாடல்?
Don't Miss
- News ஐஏஎஸ் அதிகாரி அதுல் ஆனந்தின் மகள் கலெக்டர் ஆகிறார்.. 4வது முயற்சியில் பிரம்மாண்ட வெற்றி
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Movies மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா?.. இயக்குநர் யார் தெரியுமா?.. ஆச்சரிய தகவல்
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அமெரிக்காவின் பொருளாதார தடையை தகர்த்து எறிந்த மோடியின் ராஜதந்திரம்.!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவிப்பையும் மீறி இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் இந்தியா அணு ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதனால் இந்தியா மீது பொருளாதார தட
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எஸ்-400 ஏவுகணைகளை இந்தியா வந்த முன் வந்தது. அப்போது அமெரிக்கா இந்தியா ரஷ்யாவிடம் அணு ஆயுதங்கள் உள்ளிட்டவைகளை வாங்கினால் இந்தியாவின் மீது பொருளாதார தடை வதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவிப்பையும் மீறி இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் இந்தியா அணு ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
இதனால் இந்தியா மீது பொருளாதார தடை நடவடிக்கை எடுக்க தயாரான போது, மோடி அமெரிக்காவின் நடவடிக்கையை ராஜதந்திரமாக தகர்த்தார்.
உச்சி மாநாடு :
இந்தியா- ரஷ்யா நட்புறவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இரு நாடுகளுக்கும் இடையே உச்சி மாநாடு நடத்தப்படும். கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்தது.
இதில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்தார். மேலும், இந்தியா ரஷ்யாவுடன் அணு ஆயுதங்களை வாங்கும் ஒப்பந்தம் முன் வைப்பதாக சீனா-பாகிஸ்தான் குற்றம் சாட்ட துவங்கின.
அமெரிக்கா எதிர்ப்பு:
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இந்தியா-ரஷ்யாவுடன் அணு ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தங்களை கைமாற்றக் கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்தது. பொருளாதார தடை நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தது.
இந்தியாவின் போக்கு:
திட்டதிட்டபடி ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை வாங்கும் என்று இந்தியா அறிவித்தது. இதனால் அமெரிக்காவும் அதிர்ந்தது. மேலும் சீனா-பாகிஸ்தானும் பதறின.
ரஷ்யாவுடன் ஒப்பந்தம்:
ரஷ்யாவுடன் எஸ்-400 ஏவுகணை, அணு ஆயுதம், அணு ஆயராய்ச்சி, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஒப்பந்தங்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டன. இதனால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கலாமா என்று யோசித்தது அமெரிக்கா.
சீனா-பாகிஸ்தானை சுட்டி காட்டியது:
இந்தியா ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் (5.43 பில்லியன் டாலர்) மதிப்பில் 5 ஏவுகணையை வாங்க இந்தியா இருக்கின்றது. எஸ் 400 டிரையம்ப வகையை சேர்ந்தது. இந்த ஏவுகணை நடமாடும் ஊர்த்தியிருந்து புறப்பட்டு வானில் பறக்கும் விமானத்தையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
சீனா-பாகிஸ்தானிடம் டிரோன், நவீன ரக ஹெலிகாப்பட்டர்கள், ஏவுகணைகள் இருப்பதால், இந்தியா தங்களை தற்காத்துக் கொள்ளவே வாங்குகின்றது என அமெரிக்காவிடம் தெரிவித்தது.
பொருளாதார தடை நீக்கும் அதிகாரம்:
அமெரிக்கா பொருளாதார தடையை நீக்கும் அதிகாரம் அதிபர் டிரம்ப் ஒருவருக்கு மட்டும் இருக்கின்றது. இது இது நட்புறவு நாடுகளுடன் செய்து கொண்ட புதிய கொள்ளையின்படியே இருந்தது.
பொருளாதார தடை நடவடிக்கை எடுக்காத வண்ணம் இந்தியா பல்வேறு நடவடிக்கையும் எடுத்தது.
தடை உடைக்க முயற்சி:
இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவை எதிர்கொள்வதற்கு இத்தகையை நவீன ஆயுதங்கள், வசதிகள் கொண்ட ஹெலிகாப்டர் இந்திய கடற்படைக்கு தேவையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 24 எம்ஹெச் 60 ரோமியோ நவீன ஹெலிகாப்டரை உடனடியாக வழங்குமாறு கேட்டு இந்தியா தரப்பில் இருந்து அமெரிக்காவிற்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியா வாங்குகின்றது:
அமெரிக்காவிடம் இருந்து ஏறத்தாழ 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் 24 ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்குகின்றது.
பாகிஸ்தானுக்கு ஆப்பு:
அமெரிக்காவில் இருந்து 700 கோடி ரூபாய் செலவில் எந்திர துப்பாக்கி வாங்கும் ஒப்பந்தத்தில் இந்திய கையெழுத்திட்டுள்ளது. ராணுவத்திற்கு நவீன ஆயுதங்கள் வாங்கும் நடவடிக்கையின் கீழ் முதற்கட்டமாக 72,400 எந்திர துப்பாக்கிகள் வாங்க உள்ளதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.சிக் சாசர் ரக எந்திர துப்பாக்கிகளை அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து விரைவான கொள்முதல் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஓராண்டில் கிடைத்து விடும்:
ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து ஓராண்டுக்குள் துப்பாக்கிகள் இந்திய ராணுவத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. சிக் சாசர் எந்திர துப்பாக்கியை தான் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாட்டின் ராணுவத்தினர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா படையில் ஆயுதங்கள்:
இந்தியா தனது படையில் நவீன ஆயுதங்களை வாங்கி குவித்து வருவது பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கும் இது கிலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு நவீன ஆயுதங்களையும் குவித்து வருவதால் இந்தியா வரும் 20220ம் ஆண்டிற்குள் உலக வல்லரசு பட்டியலிலும் இடம் பெற்று விடும் என்று தோன்றுகின்றது.
பொருளாதார தடைக்கு தகர்ப்பு:
இந்தியா ராஜதந்திரமாக காய் நகர்த்துவதால், அமெரிக்கா தனது எண்ணத்தை மாற்றிவிட்டது. மேலும், இந்தியா ஒருபோதும், மற்ற நாடுகளுடன் வீம்புக்கு யுத்தம் செய்து இல்லை. என்பதால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. அமெரிக்காவுடன் பிரதமர் மோடி ஏற்படுத்தி வரும் நட்புறவு அணு முறையால் பொருளாதர தடை உத்தரவு இந்தியா மீது தகர்க்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470