சரணடைந்த பாகிஸ்தான் 90000 வீரரை திரும்ப ஒப்படைத்த இந்தியா.!
1971ம் ஆண்டு நடந்த போரின் போது, பாகிஸ்தானை வென்றது. மேலும், சரணைந்த பாகிஸ்தான் வீரர் 90000 பேரை திரும்பும் ஒப்படைத்தது. மேலும், கைப்பற்றிய 15 ஆயிரம் நிலத்தையும் இந்தியா திரும்ப எந்த நிபந்தையும் இல்லாம
இந்தியாவின் மிக் 21 போர் விமானத்தை பாகிஸ்தான் தற்போது சுட்டு வீழ்த்தி விமானி அபினந்தனை பிடித்து வைத்துள்ளது. பாகிஸ்தான் நமது நாட்டு வீரரை பாதுகாப்பாக வைத்திருக்கின்றது என்று தப்பாட்டம் போடும். ஒருசிலர் 1971ம் ஆண்டு நடந்த இந்த கதையை மறந்து விட்டனர்.

1971ம் ஆண்டு நடந்த போரின் போது, பாகிஸ்தானை வென்றது. மேலும், சரணைந்த பாகிஸ்தான் வீரர் 90000 பேரை திரும்பும் ஒப்படைத்தது. மேலும், கைப்பற்றிய 15 ஆயிரம் நிலத்தையும் இந்தியா திரும்ப எந்த நிபந்தையும் இல்லாமல் ஒப்படைத்தது.
இந்த கதை தெரியாமல் பாகிஸ்தான் வீரரை நன்றாக கவனிக்கின்றது. இந்தியா தவறு செய்கின்றது என்று சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இது பாகிஸ்தானியர்களும் தெரியும். தமிழ் நாட்டில் இருந்து முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவு செய்தி பரப்பும் போராளிகளுக்கு இது சமர்ப்பணம்.

விடுதலைக்குப் பிறகு வெறுப்பு:
இந்தியா மீது விடுதலைக்குப் பிறகு இன்று வரை வெறுப்பு காட்டி வருகின்றது பாகிஸ்தான். எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றது. மேலும், ராணுவ வீரர்களின் தலையையும் துண்டித்த செய்தி நம்மை விட்டு நீங்காது. மேலும், மும்பையில் தாக்குதல், தாஜ் ஹோட்டல், எல்லையில் ஊடுவுறுல் போன்ற தீவிரவாத செயல்களில் பாகிஸ்தான் அத்துமீறி வருகின்றது.

பாகிஸ்தான் உடன் போர்:
1947, 1966, 1971, 1999 ஆகிய ஆண்டில் இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. இதில் அனைத்திலும் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது என்பது தான் நிதர்சனம் இந்திய முப்படைகள் தாக்குதலால் பயந்து நடுங்கியது பாகிஸ்தான்.

1971 போர் பாகிஸ்தான்:
கிழக்கு பாகிஸ்தான் பிரிவினை இந்தியா ஆதரிப்பாக இந்தியாவின் காஷ்மீர் பாகிஸ்தான் 1971ல் 6 ஷபேல் ரக போர் விமானங்களைக் கொண்டு இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. இந்தியா தரப்பில் 2 ஜீனாட் வகை போர் விமானங்கள் களமிறங்கி பதிலடி கொடுத்தது.

நிர்மல் ஜித்சிங் செக்கான் பதிலடி:
இந்திய விமானப்படை வீரர் நிர்மல் ஜித்சிங் செகான் காஷ்மீர் அவந்திப்பூர் விமானப்படை அழிக்கும் முயற்சியைத் தவிடு பொடியாக்கினார். பிறகு, 26 வயதில் அந்த போரின் போது உயிர்த் தியாகம் செய்தார். இன்வரை இவரின் போர் திறன் அனைவராலும் பேசப்படுகின்றது. இந்திய ராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருதும் நிர்மல் ஜித்சிங் செகானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை:
இந்திய கடற்படை 1971-ம் ஆண்டில் பாகிஸ்தானுடன் நடந்த போரின் போது டிசம்பர் 4-ம் தேதி கராச்சி துறைமுகம் மீது ரகசிய தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் போர் கப்பல்களான ஹபீஸ், கைபார் ஆகிய இரு கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி மூழ்கடித்தது.

பாகிஸ்தானுக்கு அழிவு:
ஷாஜகான் எனும் கப்பலும் பலத்த சேதத்திற்கு உள்ளானது. மேலும் பாகிஸ்தான் துறைமுகத்தில் இருந்த எரிபொருள் கிடங்குகளையும் அழித்தது. இந்த தாக்குதல்களுக்கு 'திரிசூலம்' மற்றும் 'மலைப்பாம்பு' எனப் பெயரிடப்பட்டது.
13 நாளில் முடிவுக்கு வந்தது:
13 நாளில் பாகிஸ்தானை துவம்சம் செய்தது போரை முடிவுக்கு கொண்டு வந்தது. பிறகு கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து வங்கசேத்தையும் இந்தியா இன்று உருவாக்கி விட்டது.

உயிரிழப்பு:
இந்த போரில் இந்திய தரப்பில் 3800 பேரும், பாகிஸ்தான் தரப்பில் 9800 பேரும் மரணம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி ஏ.ஜெ.கே நியாஜியும், 90,000 பேரையும் இந்தியா ராணுவத்திடம் சரணடைந்தனர்.

இந்திய மாண்பு:
அவர்களை எந்த நிபத்தையும் இல்லாமலும், கைப்பற்றிய 15 ஆயிரம் சதுர மையில் நிலத்தையும் பாகிஸ்தானிடம் இந்தியா திரும்ப ஒப்படைந்தது. இந்தியாவின் இந்த செயலை உலக நாடுகள் போற்றின.

இந்த வெற்றி டிச.4 கடற்படை தினம்:
வெற்றியினை கொண்டாடும் விதமாக டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுக்க உள்ள பல்வேறு கப்பல் படை தளங்களிலும் வெற்றி விழா கோலாகமாக கொண்டாப்படும். இதையொட்டி, பல்வேறு விமானம் சாகங்கள் நடத்தப்படுகின்றன.


Click it and Unblock the Notifications