இந்தியா : 2 லட்ச புத்தகங்களோடு பார்வையற்றோருக்கான ஆன்லைன் நூலகம் திறப்பு..!
அச்சுப்பிரதி மாற்றுத்திறன் என்பது ஒரு காட்சி, உடல், புலனுணர்வு, வளர்ச்சி, அறிவாற்றல், அல்லது இயலாமை போன்ற ஏதாவதொரு காரணத்தினால் ஒருவரால் திறம்பட அச்சு பிரதியை படிக்க முடியாத நிலையாகும்.
இனி அச்சுப்பிரதி மாற்றுத்திறன் கொண்டவர்கள் எளிமையாக கற்கும் வண்ணம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சுகமயா புஸ்தகாலாய (Sugamaya Pustakalaya) என்ற ஆன்லைன் நூலகத்தை பார்வைக் கோளாறு மற்றும் அச்சுப் குறைபாடுகள் கொண்ட மக்கள் அணுக வண்ணம் வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அணுக படிமங்கள் :
இந்த நூலகம் பல்வேறு மொழிகளில் மற்றும் பல வகையான அணுக படிமங்களில் கிடைக்கப்பெறும் சுமார் 2 லட்சம் புத்தகங்களை உள்ளடக்கியுள்ளது.

சாதனம் :
மொபைல் போன்கள், டேப்ளெட்கள், கணினிகள் , டெய்சி பிளேயர்கள் , மற்றும் பிரெய்ல் புத்தாக்க காட்சி முறை என இந்நூலகத்தில் புத்தகங்களை எந்த சாதனம் கொண்டும் படிக்க முடியும்

கோரிக்கை :
அச்சு குறைபாடுகள் கொண்ட நூலக உறுப்பினர்கள் பிரெயில் அச்சக பிரதிகளுக்கான கோரிக்கையை உறுப்பு அமைப்புகளிடம் விடுக்கலாம்

கூட்டு :
மாற்றுத்திறனாகிகளுக்கான அதிகாரமளித்தல் துறை, இந்திய டெய்ஸி கருத்துக்களம் நிறுவன (DFI) உறுப்பினர்கள் கொண்ட கூட்டு சமூக நீதி அமைச்சங்கம் மற்றும் அதிகாரமளித்தல் துறை ஆகியவைகளின் கூட்டு முயற்சியில் இந்த நூலகலாம் நிறுவபட்டுள்ளது.

ஒருமுறை பதிவு :
டிசிஎஸ் மூலம் அணுகல் ஆற்றல் பெரும் இந்த நூலகத்தின் புத்தகங்களை பெற இந்திய டெய்ஸி கருத்துக்களம் நிறுவன (DFI) அமைப்பில் ஒருமுறை பதிவு செய்தால் போதும்.

அதிகரிக்க முடியும் :
டிஎப்ஐ உறுப்பினராவது மிக எளியானதாகும் மற்றும் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், பொது நூலகங்கள் , வெளியீட்டாளர்கள் , தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , மற்றும் கூட்டாண்மை ஆகிய அனைத்தின் பங்கேற்ப்பும் இந்த நூலகத்தின் புத்தகங்கள் அணுகலை அதிகரிக்க முடியும்.

இடைவெளி :
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைகள் ஒத்துழைத்தால் எல்லா இந்திய மொழிகளிலும் அங்கீகரித்தல் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க வாசிப்பு போன்றவைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் தொழில்நுட்பங்களை வடிவமைக்க முடியும்.


Click it and Unblock the Notifications