ரஷ்யாவுடன் ரூ.200 கோடி மதிப்பிலான ஆன்டி டேங்க் மிஸைல் ஒப்பந்தம்!
ரூ.200 கோடி மதிப்பிலான ஆன்டி டேங்க் மிஸைல் திட்ட ஒப்பந்தத்தை ரஷ்யாவுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இந்தியா தற்பொழுது வெளியிட்டுள்ளது.

'ஸ்ட்ரம் அட்டகா' ஏவுகணை
முன்பு நடந்த பாலகோட் வான்வழித் தாக்குதல் போன்ற சூழ்நிலைகளிலிருந்து தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள இந்தியா ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து 'ஸ்ட்ரம் அட்டகா' எனப்படும் ஆன்டி டேங்க் மிஸைல் ஏவுகணையைத் தனது மி-35 அட்டாக் சாப்பற்களுக்காக வாங்கியுள்ளது.

ஸ்ட்ரம் ஆன்டி டேங்க் மிஸைல் ஏவுகணை
அவசரக்கால பிரிவுகளின் கீழ் ஸ்ட்ரம் ஆன்டி டேங்க் மிஸைல் ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் ரஷ்யாவுடன் கையெழுத்தாகியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் ஞாயிறு அன்று தெரிவித்துள்ளன. ரஷ்யாவுடனான இந்த ஒப்பந்தம் அவசரக்கால பிரிவுகளின் கீழ் கையெழுத்தாகியுள்ளது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அவசரக்கால பிரிவுகளின் கீழ் ஒப்பந்தம்
அவசரக்கால பிரிவுகளின் கீழ் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதினால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆன்டி டேங்க் மிஸைல் ஏவுகணைகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்த அவசரக்கால ஒப்பந்தம் ரூ.200 கோடிக்குக் கையெழுத்தாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மி-35 சாப்பர்
எதிரி டேங்க்குகள் மற்றும் கடுமையான கவச திறன் கொண்ட போர் சாதனங்களை எளிதில் அழிக்கக் கூடிய இந்த ஆன்டி டேங்க் மிஸைல் ஏவுகணைகளை, இந்தியாவின் மி-35 சாப்பர்களுக்காக இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளது.

விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்
இந்திய விமானப் படையின் தாக்குதல் போர் விமானப்படையில் முக்கிய இடத்தில் இந்த மி-35 சாப்பர்கள் உள்ளன மற்றும் அமெரிக்காவிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட அப்பாச்சி துப்பாக்கிகள் மி-35 சாப்பர்களுக்கு வழங்கப்பட்டு அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.


Click it and Unblock the Notifications