Just In
- 15 min ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 25 min ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- 2 hrs ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- 2 hrs ago பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
Don't Miss
- News சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நீங்களுமா Oppo? வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு: சீன நிறுவனங்களுக்கு நேரம் சரியில்லை.!
சீன நிறுவனங்களுக்கு இப்போது நேரம் சரியில்லை என்று தான் கூறவேண்டும். அதாவது ஏற்கனவே வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சியோமி, விவோ நிறுவனங்கள் சிக்கியது. தற்போது அந்த வரிசையில் ஒப்போ நிறுவனமும் சிக்கியுள்ளது.
ஒப்போ நிறுவனம்
குறிப்பாக ஒப்போ நிறுவனம் தற்போது ரூ.4,389 கோடி சுங்க வரியை செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. DRI எனப்படும் வருவாய்புலனாய்வு இயக்குநரகம் தான் ஒப்போ மொபைல் இந்திய பிரைவேட் லிமிடெட் சுங்க வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது.
Xiaomi நேர்மைக்கு இந்தியர்கள் அளித்த பரிசு: விற்பனை மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா?
அதாவது இந்தியாவில் மொத்த வர்த்தகம், மொபைல் விநியோம் மற்றும் பாகங்கள்,உற்பத்தி, அசெம்பிளிங் போன்றவற்றில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதுஒப்போ நிறுவனம். குறிப்பாக இது சீனாவில் இருக்கும் குவாங்டாங் ஒப்போ மொபைல் டெலிகம்யூனிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் உடன் இணைந்தநிறுவனமாகும்.
போனுக்குள்ள இயர்போனா? அம்மாடியோவ்! Nokia -வின் இந்த மாடல் போனில் இவ்வளவு டிவிஸ்ட்-ஆ
ஒப்போ அலுவலகம்
மத்திய நிதி அமைச்சகத்தின் தகவலின்படி, டிஆர்ஐ ஒப்போ நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் முக்கிய அலுவலர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது. ஆனால் இந்த விசாரணையில் ஒப்போ இந்தியா மொபைல் தயாரிப்பு பொருள்களை இறக்குமதி செய்தது குறித்து தெளிவான தகவல்களை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
வாரே வா: Nokia T10 டேப்லெட் அறிமுகம்! விலை & முழு விபரம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
சர்வதேச நிறுவனங்கள்
அதேபோல் ஒப்போ நிறுவனம் சில சர்வதேச நிறுவனங்களுக்கு ராயல்டி என்ற பெயரில் பணம் வழங்கி உள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்ந நிறுவனங்களில் சில சீனாவை தளமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Trump Vs Musk: உத்தரவிட்டால் மண்டியிட்டே கெஞ்சிருப்பார்., இப்போ வளர்த்த கடா மார்பில் பாயுது!
ராயல்டி மற்றும் உரிமக் கட்டணங்கள்
மேலும் இந்நிறுவனம் பொருள்களை இறுக்குமதி செய்யும் போது கூட ராயல்டி மற்றும் உரிமக் கட்டணங்களை பரிவர்த்தனை மதிப்பில் வெளியிடவில்லைஎன்று தகவல் வெளிவந்துள்ளது.
இது ஆரம்பம் தான்., பிரபஞ்சத்தின் ரகசியமும் துல்லியமும்: களமிறங்கிய NASA james Webb தொலைநோக்கி!
ஒப்போ நிறுனவனத்தின் தவறான அறிக்கை மூலம் ரூ.2981 கோடி சுங்கவரி விலக்கு பயன் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பின்பு ரூ.1408 கோடிவரி ஏய்ப்பு செய்துள்ளதும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மூலம் தெரியவந்துள்ளது.
சீனா போன் நிறுவனங்கள்
மேலும் சுங்கச் சட்டம், 1962-இன் கீழ் ஒப்போ இந்தியா, அதன் ஊழியர்கள் மற்றும் ஒப்போ சீனா போன் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையிலான நோட்டீஸ் கூட அனுப்பப்பட்டுள்ளது.
விவோ நிறுவனம்
சமீபத்தில் விவோ நிறுவனம் தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் போலி நிறுவனங்கள் வழியே பணப் பரிவர்த்தனை செய்யும் நோக்கில், ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
62,476 கோடி ரூபாய்
குறிப்பாக விவோ-இன் இந்தியப் பிரிவு மொத்த Turnover-ல் 50 சதவீத பணத்தைச் சுமார் 62,476 கோடி ரூபாயை இந்தியாவில் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காகவே திட்டமிட்டு சீனாவுக்கு அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.
விவோ நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்க துறை செய்த சோதனையில் பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தமான 119 வங்கி கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.465 கோடி மதிப்புள்ள பணம், ரூ.73 லட்சம் ரொக்கம் மற்றும் 2 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.
திரும்ப வந்துட்டேனு சொல்லு- 3 நாள் பேட்டரி ஆயுளுடன் பட்ஜெட் விலை Nokia ஸ்மார்ட்போன் அறிமுகம்!
விவோ நிறுவனத்தின் இயக்குனர்கள்
அதேபோல் இந்தியாவில் செயல்பட்டு வரும் விவோ நிறுவனத்தின் இயக்குனர்களாக ஹுஹென்ஷென் ஒவ் மற்றும் ஹூஹெங் ஜீ ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
ஆனால் இந்த சோதனை தொடங்கியபின் விவோ நிறுவனத்தின் இயக்குனர்களா ஹூஹென்ஷென் ஒவ் மற்றும் ஹூஹெங் ஜீ ஆகிய இரண்டு பேரும் இந்தியாவை விட்டு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020-ம் ஆண்டு கூட விவோ சிக்கியது
விவோ ஏற்கனவே ஒரு பிரச்சனையில் கடந்த 2020-ம் ஆண்டு சிக்கியது. அதாவது செல்போன் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு தனித்தனி ஐஎம்இஐ எண்ணை கொண்டிருக்க வேண்டும் என்று இந்தியதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2017-ம் ஆண்டு உத்தரவுபிறப்பித்தது.
குறிப்பாக இது தவறும்பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்ததது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம். ஆனால் விவோ நிறுவனத்தின் சுமார் 13500 போன்கள் ஒரே இஎம்இஐ எண்ணை கொண்டிருந்தது 2020-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து உத்தரப் பிரதேச காவல்துறை விவோ நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470