உலகத்துலயே அதிகமா மொபைல் தயாரிக்கும் நாடு இந்தியா தானா? என்னங்க சொல்றீங்க.. உண்மையாவா?
உலகளவில் அதிகமாக ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் நாடு எது தெரியுமா? இந்த பட்டியலில் 2வது இடத்தில், நமது இந்தியா அதிக எண்ணிக்கையிலான மொபைல் போன்களை தயாரித்து சிறந்த நாடக திகழ்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்புங்கள், இந்தியா தான் முன்னிலையில் இருக்கிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் ஏற்றுமதி 2014 மற்றும் 2022 ஆண்டுக்கு இடையில் 2 பில்லியன் யூனிட் எண்ணிக்கையை கடந்துள்ளது. சமீபத்திய கவுண்டர்பாயின்ட் ஆராய்ச்சி வெளியிட்ட அறிக்கையின் படி, உலகளவில் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. உண்மையில், இது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.

சமீபத்திய அறிக்கையின் படி, இந்த வளர்ச்சியின் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் டிஜிட்டல் கல்வியறிவு, சந்தையில் பாரிய தேவை மற்றும் மேக்-இன்-இந்தியா முயற்சிக்கான அரசாங்கத்தின் உந்துதல் போன்ற காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், 2014 மற்றும் 2023 ஆண்டுக்கு இடையில், நாட்டின் மொபைல் ஃபோன் உற்பத்தி 23% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ந்துள்ளது.
"இந்திய மொபைல் போன் ஒட்டுமொத்த உற்பத்தி 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியின் கீழ் 2 பில்லியன் யூனிட்களைக் கடந்தது" என்ற தலைப்பில் கவுண்டர்பாயின்ட் அறிக்கை வெளிப்படுத்திய அனைத்து விவரங்களையும் பார்ப்போம். கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சியின்படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் போன் ஏற்றுமதி 2014-2022 காலகட்டத்தில் 2 பில்லியன் ஒட்டுமொத்த யூனிட்களைத் தாண்டி, 23% சிஏஜிஆர் பதிவு செய்துள்ளது.
2022 இல் உள்நாட்டு மொபைல் ஏற்றுமதிகளில் 98% உள்நாட்டில் செய்யப்பட்டவை, 2014 இல் வெறும் 19% உடன் ஒப்பிடும்போது. இந்த அறிக்கையின்படி, இந்த வளர்ச்சி இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த முன்முயற்சிகளில் PMP திட்டம், மேக் இன் இந்தியா, உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI), மற்றும் ஆத்மா-நிர்பார் பாரத் (சுய-சார்ந்த இந்தியா) ஆகியவை அடங்கும்.

இந்திய அரசாங்கம் இந்த முயற்சிகள் மூலம் உள்ளூர் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டலை அதிகரிக்க முயற்சிக்கிறது. கவுண்டர்பாயின்ட்டின் ஆராய்ச்சி இயக்குனர் தருண் பதக் கூறுகையில், இந்தியாவில் உள்ளூர் மதிப்பு கூட்டல் தற்போது சராசரியாக 15% க்கும் அதிகமாக உள்ளது. இது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை இலக்காக இருந்தது என்றும், இந்தியாவில் இன்று சுமார் 200 மொபைல் பிராண்டுகள் தங்கள் சாதனத்தை அசெம்பிள் செய்து வருவதாகவும் பதக் டெக்க்ரன்ச்-க்கு வெளிப்படுத்தினார்.
இந்த எண்ணிக்கை 2014க்கு முன் வெறும் இரண்டாக இருந்தது. இன்று, இந்தியா வியட்நாமை விட 1.8 மடங்கு அதிகமாகவும், சீனாவை விட 1/4 மடங்கு அதிகமாகவும் ஃபோன்களை உற்பத்தி செய்கிறது. தற்போது, சீனா, இந்தியா மற்றும் வியட்நாம் ஆகியவை உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி நாடுகளாக உள்ளன. இந்தியாவும் எதிர்காலத்தில் மொபைல் ஏற்றுமதி அதிகார மையமாக மாற தயாராகி வருகிறது.
உதிரிபாகங்கள் மற்றும் முழுமையாக கட்டமைக்கப்பட்ட யூனிட்கள் (CBU) மீதான இறக்குமதி வரிகளை அதிகரிப்பதன் மூலம் உள்ளூர் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டலை அரசாங்கம் உயர்த்தி, PMP திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக மூத்த ஆய்வாளர் பிரசீர் சிங் கூறியதாக சமீபத்திய கவுண்டர்பாயின்ட் அறிக்கை மேற்கோள் காட்டுகிறது.
மொபைல் போன் உற்பத்தி உட்பட 14 துறைகளுக்கு உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தையும் அறிவித்தது. இந்த காரணிகள் அனைத்தும் இந்திய ஏற்றுமதி வளர்ச்சிக்கு வழிவகுத்தன. இது 1.4 டிரில்லியன் டாலர் முதலீட்டில் இந்தியாவை குறைக்கடத்தி மையமாக மாற்றுவதில் கவனம் செலுத்தும் செமிகண்டக்டர் பிஎல்ஐ திட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இந்த அறிக்கையின் தகவல் மூலம் இந்தியா மற்ற உலக நாடுகளை விட, அதிகமாக மொபைல் போன்களை தயாரித்து விநியோகம் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








