மொபைல் சார்ஜரை வாயில் வைத்த 2 வயதுக் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட் பகுதியில் வசிக்கும் ரசியா என்பவற்றின் 2 வயதுக் குழந்தை மொபைல் சார்ஜ்ஜரை வாயில் வைத்து மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ள சம்பவம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட் பகுதியில் வசிக்கும் ரசியா என்பவற்றின் 2 வயதுக் குழந்தை மொபைல் சார்ஜ்ஜரை வாயில் வைத்து மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ள சம்பவம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

2 வயதுக் குழந்தை
ரசியா தனது 2 வயதுக் குழந்தையான ஷேஹ்வர் உடன் ஜஹாங்கீரிபாத் பகுதியில் உள்ள அவரின் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். ரசியா குடும்பத்தைச் சேர்ந்த வீட்டிலிருந்த யாரோ மொபைல் போன்னை சார்ஜிங் செய்துள்ளனர்.

சார்ஜ்ர் பின்னை வாயில் வைத்த குழந்தை
சார்ஜரில் இருந்த போனை சார்ஜ் செய்தவுடன் ஸ்விட்சை ஆப் செய்யாமல் போனை மட்டும் எடுத்துள்ளனர். ரசியாவின் இரண்டு வயதுக் குழந்தை விளையாட்டாக மொபைல் சார்ஜ்ர் பின்னை வாயில் வைத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளது.

வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை
தகவல் அறிந்து ஜஹாங்கீரிபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். வழக்குப் பதிவு செய்ய காவல்துறையினர் கேட்டும் குடும்பத்தினர் ஒத்துழைக்காததால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுதல்
குழந்தைகள் வைத்துள்ள தாய்மார்கள், குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறும், மொபைல் சார்ஜ்ர்கள், பிளக்குகள் போன்ற மின்சார பொருட்கள் அனைத்தையும் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத விதத்தில் வைத்துக்கொள்ளுமாறுபெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுதல் விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications