ஒளிந்து பிடித்த விளையாட்டு: வாஷிங் மெஷினுக்குள் சிக்கிய நபர்., சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறை?
ஒளிந்து பிடித்து விளையாட்டில் வாஷிங் மெஷினுக்குள் ஒளிந்து கொண்ட நபர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர்.

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய கட்டாயம்
கொரோனா அச்சம் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உலகின் பல்வேறு நாடுகளும் உள்ளது. இதையடுத்து இந்தியாவில் பிரதமர் மோடி மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அறிவித்தார். இதையடுத்து அத்தியாவசிய தேவைக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சமூக இடைவெளியை பின்பற்றாமல் கேரம்போர்ட்
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதில் சிலர் தங்களது நண்பர்களோடு சமூக இடைவெளியை பின்பற்றாமல் கேரம்போர்ட் விளையாடவும், கிரிக்கெட் விளையாண்டும் வருகிறார்கள்.

போலீஸார் அனுப்பிய ட்ரோன் படம் பிடித்தது
அப்படி கேரம்போர்டு விளையாடிய சிலரை போலீஸார் அனுப்பிய ட்ரோன் படம் பிடித்தது. இதை பார்த்த கேரம்போர்ட் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தெரித்து ஓடினார். அதில் ஒருவர் மட்டும் கேரம்போர்டை கையில் எடுத்தபடி போலீஸார் அனுப்பிய ட்ரோன் உடன் கபடி ஆடினார்.

நேரத்தை எப்படி செலவிட என தெரியாமல் திணறி வருகின்றனர்
மேலும் சிலர் தங்களது நேரத்தை எப்படி செலவிட என தெரியாமல் திணறி வருகின்றனர். அத்துமீறி வெளியே வருபவர்களுக்கு போலீஸார் தக்க தண்டனை புகுத்தி வருகிறார்கள். இதில் ஒரு கூட்டம் வித்தியாசமாக ஒளிந்து பிடித்து விளையாடி விபரீதத்தில் சிக்கி உள்ளனர்.

உறவுக்கார நண்பர்களோடு ஒளிந்து விளையாட்டு
இதில் அமரி என்ற ஒருவர் தனது உறவுக்கார நண்பர்களோடு ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தார். சுமார் 18 மதிக்கத்தக்க இளம் பெண் மெத்தைக்கு அடியில் ஒளிந்து உள்ளார். அனைத்து இடத்தையும் உறவுக்காரர்களும் நண்பர்களும் நிறப்பி விட்டனர்.

வாஷிங் மெஷினுக்குள் நுழைந்து ஒளிந்து கொண்டார்
இதையடுத்து அமரி என்ன செய்வது என்று தெரியாமல், நூதனமாக சிந்தித்து வாஷிங் மெஷினுக்குள் நுழைந்து ஒளிந்து கொண்டார். இதையடுத்து சிறிது நேரம் விளையாடிய நண்பர்கள் தேடி வாஷிங் மெஷினுக்கு நுழைந்திருந்த அமரி குறித்து யோசித்துள்ளனர்.

வெளியே வர முடியாமல் தவித்துள்ளார்
அமரியை கண்டுபிடித்த நண்பர்கள் வாஷிங் மிஷனுக்குள் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்துள்ளார். எனினும் வெளியே வர முடியாமல் தவித்த அமரியை வெளிக்கொண்டுவர, அவரது நண்பர்கள் முயற்சித்துள்ளனர். தையடுத்து அவர்கள் தீயணைப்புத்துறைக்கு போன் செய்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர்
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் அமரியை பத்திரமாக மீட்டனர். வாஷிங் மிஷனுக்குள் இருக்கும் போதே ஸ்விட்ச் ஆன் செய்தால் என்ன செய்வது என்று தெரியாத அமரியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்
அமரியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர் அவரிடம் என்ன நடந்தது என கேட்டுள்ளனர். நான் ஒளிந்து பிடித்து விளையாடினேன் என கூறியுள்ளார். வெற்றிப் பெற்று விட்டீர்களா என அவர் கேட்டதும் அமரி அவர்களுக்கு நன்றி கூறியபடி சிரித்துக் கொண்டே பிழைத்தேன் என கூறியுள்ளார்.

அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை அழிக்க முடியும்
தனிமை வரம் என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் திகட்டும் வகையில் இந்த ஊரடங்கு உத்தரவு போர் அடிக்கத் தொடங்கிவிட்டது. இருப்பினும் இந்த நேரத்தில் அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தடுக்க முடியும்.
source: nbcnews.com


Click it and Unblock the Notifications








