ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. 2 நாட்கள் சிறப்பு முகாம்.. தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இரண்டு நாட்களுக்கு eKYC சரிபார்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு முகாம்கள் எப்போது நடைபெறுகின்றன மற்றும் யாரெல்லாம் பங்குபெறலாம்? என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மின்னணு குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஆதார் eKYC சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி, ஆதார் eKYC தொடர்பான சிறப்பு முகாம் ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை என இரு நாட்களிலும் நடைபெறும் இந்த முகாம், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
அதுவும் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே, குடும்ப அட்டையில் (Ration Card) இடம்பெற்றுள்ள பயனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, குறிப்பிட்ட நேரத்தில் தங்களது ஆதார் eKYC பணிகளை மேற்கொள்ளலாம்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும் கைரேகை அடிப்படையிலான Biometric e-KYC மூலம் சரிபார்த்து உறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்தப் பணியில், இதுவரை 95.86 சதவீதம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் e-KYC செய்யப்படாமல் உள்ள பதிவுகளையும் முழுமையாக நிறைவு செய்வதற்காக, மாநிலம் முழுவதும் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. மீதமுள்ள பயனாளிகளின் பதிவுகளை விரைவாக சரிபார்த்து, 100 சதவீதம் e-KYC பணியை முடிப்பதே இந்த சிறப்பு முகாமின் முக்கிய நோக்கமாகும்.
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும், வயது வரம்புக்கு உட்பட்ட குழந்தைகள் உட்பட, தங்களுக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று கைரேகை அடிப்படையிலான eKYC பதிவை மேற்கொள்ள வேண்டும். இதற்காக குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகிய இரு ஆவணங்களையும் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஆதார் eKYC சரிபார்ப்பு பணியை உரிய முறையில் நிறைவு செய்வது மிகவும் அவசியமாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் அரசு சார்பில் வழங்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களை எவ்வித தடையும் இன்றி தொடர்ந்து பெறுவதற்கு வசதியாக இருக்கும்.

இதுவரை ஆதார் eKYC எனப்படும் கைரேகை சரிபார்ப்பை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள், இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள தேதிகளில் தங்களது அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று தேவையான பதிவுகளை விரைவாக நிறைவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கைரேகை பதிவு பணியை இதுவரை முடிக்காமல் இருக்கும் பயனாளிகளுக்கு இந்த மாநில அளவிலான சிறப்பு முகாம் பயனுள்ளதாக அமையும். எனவே, குறிப்பிட்ட நாட்களில் நியாயவிலைக் கடைகளை அணுகி eKYC சரிபார்ப்பை நிறைவு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications