2020 உணவாக இருந்தால் என்னவாக இருக்கும்?- Zomato கேள்வி., அது சைனீஸ் உணவாக இருக்குங்கோ!
2020 ஆம் ஆண்டு உணவாக இருந்தால் அது என்ன உணவாக இருக்கும் என சொமாட்டோ கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு சமூக வலைதள வாசிகள் பலரும் தங்களது வித்தியாசமான பதில்களை பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்துக் கொண்டே வருகிறது
கொரோனா பாதிப்பு இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலைபடி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற சில நாடுகளோடு ஒப்பிடுகையில் இது குறைவு என்றாலும் இந்தியாவில் பிற நாட்டவர்கள் பாராட்டு வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்
அதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது 20 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் 3 சதவீதம் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது
இந்தியாவில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதுவரை அங்குமட்டும் 6430 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் கோவாவில் கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து அங்கு மட்டும் 100 சதவீதம் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குஜராத் மற்றும் டெல்லி
குஜராத்தில் 2624 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 112 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 2376 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதித்தவர்கள் எண்ணிக்கை 1700-ஐ கடந்துள்ளது
தமிழகத்தில் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1700-ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தாலும், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு
இதையடுத்து சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. இதையடுத்து ஊரடங்கு கடுமையாக்கப்பட்டே வருகிறது.

2020 உணவாக இருந்தால் அது என்னவாக இருக்கும்
இந்த நிலையில் சொமேட்டோ நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் 2020 உணவாக இருந்தால் அது என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு டுவிட்டர் வாசிகள் பலதரப்பு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சைனீஸ் உணவாகதான் இருக்கும்
அதற்கான பதில்களில் கொரோனா பர்கர், சைனீஸ் உணவு, பீட்சா வித் பிளாக் ஷூ பாளிஷ், உள்ளிட்ட பதில்களை பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் இந்த கேள்விக்கு பதில் யோசித்து பார்த்தால் என்னவாக இருக்கும் என்று யூகிக்கக் கூட முடியவில்லை ஏன்னென்றால் எந்த வருடமும் பார்த்திராத சிக்கலை உலக நாடுகள் முழுவதும் சந்தித்து வருகிறது என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications








