ஜியோ ஆபர் எதிரோலி : அதிரடியான ஆபர்களை அறிவித்தன ஐடியா & ஏர்செல்.!
ஐடியா ரூ.453-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி 3ஜி டேட்டாவைப் பெறமுடியும், அதன்பின்பு கால் அழைப்புகள் நாள் ஒன்றுக்கு 300 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1,200 நிமிடங்கள் மட்டுமே பெறமுடியும் என அந்நிறு
ஜியோ தற்சமயம் புதிய கட்டணங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது, ஜியோ அறிவித்த சலுகைகளை தொடர்ந்து இப்போது ஐடியா மற்றும் ஏர்செல் போன்ற நிறுவனங்களும் அதிரடியாக சில ஆபர்களை அறிவித்துள்ளது, இந்த ஆபர் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது.
ஐடியா தற்போது ரூ.453-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி டேட்டாவைப் பெறமுடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, அதன்பின்பு ஏர்செல் நிறுவனமும் குறிப்பிட்ட சலுகைகளை வழங்கியுள்ளது, தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த மாதம் கட்டணங்களை மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடியா :
ஐடியா நிறுவனம் தற்போது புதிய டேட்டா ஆபரை அறிவித்துள்ளது அதன்படி ரூ.453-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி 3ஜி டேட்டாவைப் பெறமுடியும் என தெரிவித்துள்ளது, மேலும் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும்.

கால் அழைப்புகள்:
ரூ.453-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி 3ஜி டேட்டாவைப் பெறமுடியும், அதன்பின்பு கால் அழைப்புகள் நாள் ஒன்றுக்கு 300 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1,200 நிமிடங்கள் மட்டுமே பெறமுடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஜியோ :
ஜியோ நிறுவனம் தற்போது அறிவித்துள்ள ஆபர் ரூ.399-க்கு ரீசார்ஜ் 84ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேசமயம் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும்.

ஏர்செல்:
ஏர்செல் நிறுவனம் தற்போது புதிய ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது, அதன்படி ஏர்செல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.384-க்கு ரீசார்ஜ் செய்தால் 84ஜிபி டேட்டாவைப் பெறமுடியும், மேலும் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும். இந்த ஆபர் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டுமே பயன்படும் வகையில் உள்ளது, கூடிய விரைவில் அனைத்து இடங்களுக்கும் இந்த ஆபர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications