ரூ.357/-ல் திருத்தம்; ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கு 'செக்' வைத்த ஐடியா.!
இதன் மூலம் நாள் ஒன்றிற்கு 1.5ஜி மற்றும் 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் போட்டியாளர் ஆபரேட்டர்களின் கட்டணத் திட்டங்களை இந்த திட்டம் கடுமையாக எதிர்கொள்ளும்.
புதிய கட்டண திட்டங்களை தொகுப்பதை விட, ஏற்கனவே இருக்கும் திட்டங்களின் நன்மைகளை திருத்துவது ஒரு சிறப்பான வழிமுறை என்பதை நன்கு உணர்ந்துகொண்ட ஐடியா செல்லுலார் நிறுவனமானது அதன் ரூ.357/- திட்டத்திலும் சில மாற்றங்களை அமைதியாக செய்திருக்கிறது.

ஐடியா நிறுவனத்தின் பட்ஜெட் திட்டமான ரூ.357/- ஆனது இனி நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இதன் மூலம் நாள் ஒன்றிற்கு 1.5ஜி மற்றும் 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் போட்டியாளர் ஆபரேட்டர்களின் கட்டணத் திட்டங்களை இந்த திட்டம் கடுமையாக எதிர்கொள்ளும்.

மொத்தம் 56ஜிபி அளவிலான டேட்டா
ஐடியா செல்லுலரின் ரூ.357/- கட்டண திட்டமானது இப்போது 2 ஜிபி தரவை கொடுக்கிறது என்பதை தவிர்த்து இதர நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த திட்டம் செல்லுபடியாகும் காலத்தில் மொத்தம் 56ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

நாட்கள் என்கிற செல்லுபடி காலம்
அதாவது ரூ.357/- ஆனது 28 நாட்கள் என்கிற செல்லுபடி காலத்தை கொண்டுள்ளது.மேலும் இந்த திட்டமானது தேசிய ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் நன்மையையும் வழங்குகிறது.

கூடுதலாக 1ஜிபி அளவிலான டேட்டா
குறிப்பிடத்தக்க வண்ணம், இந்த ஐடியா திட்டத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள மாற்றமானது மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கிறது. மைஐடியா ஆப் அல்லது ஐடியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 1ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

அழைப்பு நன்மையின் வரம்பு
இப்போது இந்த ரூ.357/- திட்டமானது மற்ற வட்டாரங்களில் மேற்குறிப்பிட்டுள்ள அதே அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் அழைப்பு நன்மையின் வரம்பை பொறுத்தமட்டில், ஒரு நாளைக்கு 250 நிமிடம் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் குரல் அழைப்புகள் (அதாவது வோடபோன் போன்றே) என்று கட்டுப்படுத்துகிறது.

வரம்பு நீக்கப்பட்டது
பார்தி ஏர்டெல் நிறுவனமானது சமீபத்தில் அதன் குரல் அழைப்புகளுக்கான வரம்பை நீக்கியது என்பதும், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கிகொண்டு தான் இருக்கிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.

வோல்ட் வாய்ஸ் கால் தொழில்நுட்பம்
திட்டங்கள் மற்றும் நன்மைகளை தவிர்த்து, இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு இயக்குனர்களான ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் வோல்ட் வாய்ஸ் கால் தொழில்நுட்பத்தை வருகிற 2018-அம ஆண்டு முதல் கையாளுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆபரேட்டர்களிடமிருந்து இதுசார்ந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் ஏதுமில்லை.


Click it and Unblock the Notifications