ஐசிஐசிஐ ஏடிஎம்களில் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறை அறிமுகம்: எப்படி தெரியுமா?
இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது, அதன்படி ஐ-மொபைல் (imobile) செயலியைப் பயன்படுத்தி ஏடிஎம்களில் ஒருநாளில் அதிகபட்சமாக 20ஆயிரம் ரூபாய் வரை டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் என ஐசிஐசிஐ செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

15ஆயிரம் ஏடிஎம்களில் இந்த வசதி
குறிப்பாக நாடு முழுவதும் வங்கியின் 15ஆயிரம் ஏடிஎம்களில் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெபிட் கார்டு எடுத்துவர மறந்து விட்டாலோ அல்லது அதை
பயன்படுத்த விரும்பாவிட்டாலோ இந்த வசதி மூலம் பணத்தை எளிதாக எடுத்துக் கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐமொபைல் செயலி
இதற்கு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் ஒடிபி மூலம் டெபிட் கார்டுஇல்லாமலே பணம் எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி இப்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதியைபெற வேண்டும் என்றால், ஐசிஐசிஐ வங்கியின் செயலியான ஐமொபைல் செயலியை கண்டிப்பாக பதிவிறக்கம் செய்யவேண்டும். ஆனால் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ ஏற்கனவே அறிமுகம்செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வழிமுறைகள்
#1
முதலில் imobile செயலியை பதிவிறக்கம் செய்து உள்நுழைய வேண்டும்.
அடுத்து services என்பதை கிளிக் செய்துcash withdrawal at ICICI bank ATM என்றஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்.

#2
பின்னர் பணம் எவ்வளவு எடுக்கவேண்டும் என்பதை குறிப்பிட்டு வங்கிக் கணக்கை தேர்வு செய்யவேண்டும், அதன்பிறகு ஏதாவது ஒரு நான்கு இலக்க எண்ணை தற்காலிகமாக இட வேண்டும். பிறகு submit கொடுக்கவேண்டும். உடனே உங்கள் செல்போனுக்கு ஒடிபி வரும்.

#3
ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்-க்கு சென்று cardless cash withdrawal முறையை தேர்வு செய்ய வேண்டும்.
பின்பு உங்கள் செல்போன் எண்ணை பதிவிட்டு செல்போனுக்கு வந்த ஒடிபி-ஐ பதிவிட வேண்டும். பிறகு நாம்ஏற்கனவே பதிவிட்ட தற்காலிக நான்கு இலக்க எண்ணை பதிவிட்டு பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பதுகுறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications