இனி ட்விட்டர் மூலம் பணம் பறிமாற்ற முடியும் என்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ.
ட்விட்டர் மூலம் பணம் பறிமாற்றம் செய்யவும் புதிய வசதியை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சேவை சமூக வலைதளங்களை பயன்படுத்துவோருக்கு பலன் அளிக்கும் என்பதோடு பண பறிமாற்றங்களை சுலபமாக்கவும் செய்யும். ட்விட்டர் மூலம் பண பறிமாற்றம் செய்வது எப்படி என்று பாருங்கள்.

இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கல் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் ட்விட்டர் பக்கத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். ட்விட்டரில் பதிவு செய்து சந்தாதாரராக இணைந்த பின் பண பரிமாற்றம் செய்ய, வாடிக்கையாளர் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரது ட்விட்டர் முகவரியை தெரிந்து கொள்ள வேண்டும்.

பணத்தை ட்விட்டர் முகவரிக்கு அனுப்பியவுடன் "பிரத்யேக அடையாள குறியீட்டு எண்" எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும். அடையாள எண்ணை பணத்தை பெறுபவர் பிரத்யேக பக்கத்தில் டைப் செய்ய வேண்டும். இதன் பின் பரிமாற்றம் முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.
மேலும், ஐ.சி.ஐ.சி.ஐ தவிர மற்ற வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் ட்விட்டர் வழியாக பணத்தை பெற குறிப்பிட்ட வங்கியின் IFSC கோடை பதிவு செய்ய வேண்டும்.

சமூக வலைதளங்கள் பல வழிகளில் முன்னேறி வரும் நிலையில் ஐ.சி.ஐ.சி.ஐ நிறுவனத்தின் இந்த திட்டம் பலருக்கும் பேருதவியாக இருக்கும் என்பதோடு வாடிக்கையாளர்களின் எண்னிக்கையையும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications