5ஜி சேவை சோதனை முயற்சி "பலிகொடுக்கப்பட்ட" பறவைகள்: இது தான் உண்மையான 2.0.!
நெதர்லாந்து உள்ள ஹேக் பகுதியில் நடத்தப்பட்ட 5ஜி சேவைக்கான சோதனை முயற்சி பெரும் துயரத்தில் முடிந்துள்ளது.
நெதர்லாந்து உள்ள ஹேக் பகுதியில் நடத்தப்பட்ட 5ஜி சேவைக்கான சோதனை முயற்சி பெரும் துயரத்தில் முடிந்துள்ளது.

கடந்த வாரம் நடத்தப்பட்ட 5ஜி சேவைக்கான சோதனை முயற்சியில் சுமார் 300 பறவைகள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹேக் பகுதி
ஹேக் பகுதியில் நடத்தப்பட்ட 5ஜி சேவையக்கான சோதனை முயற்சியில் அந்தப் பகுதி பார்க் வளாகத்தைச் சுற்றி பரந்த பறவைகள் காரணம் இன்றி திடீரென ஒரே நேரத்தில் இறந்துள்ளது. பார்க் வளாகத்தில் மட்டும் ஒரே நேரத்தில் 150க்கும் மேலான பறவைகள் உயிரிழந்து தரையில் கிடந்துள்ளது.

5ஜி சேவை காரணம்
இந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் இன்னும் சரியாக வெளி உலகிற்கு வெளிவரவில்லை, சில காரணத்திற்காக மறைக்கப்பட்டுள்ளது. பறவைகள் ஒரே நேரத்தில் இறந்ததற்குக் காரணம் 5ஜி சேவையின் சோதனை முயற்சி தான் காரணமாக இருக்குமென்று பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் தெரிவித்தது
டச் ரயில்வே நிலையத்தில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின் பொது அந்தப் பகுதியில் இருந்த நபர்கள் தெரிவித்தது, மரத்திலிருந்த பறவைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தது, ஏரியில் இருந்த அன்னப்பறவைகள் விசித்திரமாகச் சத்தமிட்டு தங்களின் தலைகளை தண்ணீருக்குள் மூழ்கிக்கொண்டு கதிர்வீச்சிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொண்டது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைரஸ், பாக்டீரியா போன்ற தாக்குதலால் உயிர் இழக்கவில்லை
இறந்த பறவைகள் ஆய்வு செய்யப்பட்டன, அதில் அணைத்து ஆரோக்கியமானபறவைகளும் இருதய கோளாறு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இறந்த பறைவழி ஆய்வு செய்ததில் அவை வைரஸ், பாக்டீரியா தோற்று அல்லது விஷம் போன்ற தாக்குதலால் உயிர் இழக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

5ஜி கதிர்வீச்சு காரணம்
பறவைகள் ஒரே நேரத்தில் இறந்ததற்கு அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 5ஜி கதிர் சேவை தான் காரணம் என்பதும், கதிர்வீச்சினால் பறவைகளின் இருதயங்களில் கோளாறு ஏற்பட்டு உயிர் இழந்துள்ளது என்பதும் தற்பொழுது தெரியவந்துள்ளது.

வினாடிக்கு மில்லியன் என்ற அளவில் மைக்ரோவேவ் கதிர்வீச்சு
சோதனை செய்யப்பட்ட 5ஜி சேவை, உயிரினங்களின் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய ஒழுங்கற்ற துடிப்பு கொண்ட மைக்ரோவேவ் கதிர்வீச்சுகள் என்பதும் இவை வினாடிக்கு மில்லியன் என்ற அளவில் கதிர்களை வெளியேற்றுகிறது என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.

பார்க் வளாகம் மூடப்பட்டுள்ளது
ஹேக் பார்க் வளாகம் தற்பொழுது மூடப்பட்டுள்ளது, இன்னும் சில பகுதிகளில் இறந்த பறவைகளின் உடல்களை மீட்கும் பணி நடந்துவருகிறது. முழு பகுதியும் சுத்தம் செய்த பிறகு திறக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி கதிர்வீச்சினால் உயிர் இழந்த பறவைகளின் எண்ணிக்கை இப்பொழுது வரை 300 தாண்டியுள்ளது.

உலகை நம்மை அறியாமல் அளித்துக் கொண்டிருக்கிறோம்
நாம் வேகமாக வீடியோ பார்ப்பதற்கும் கேம் விளையாடுவதற்கும் 5ஜி சேவையை எதிரிபார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் வேகமாக நம்மைச் சுற்றியுள்ள உயிர்னங்கள் மற்றும் உலகை நம்மை அறியாமல் அளித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.


Click it and Unblock the Notifications