Home
News

அமெரிக்காவுக்கு எதிராக ஹூவாய் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு.!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடும் வர்த்தக போர் நடந்து வருகின்றது. அமெரிக்காவில் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கான வரி விதிப்பு இரட்டிப்பு செய்யப்பட்டது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்காவிலிரு

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடும் வர்த்தக போர் நடந்து வருகின்றது. அமெரிக்காவில் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கான வரி விதிப்பு இரட்டிப்பு செய்யப்பட்டது.

பதிலுக்கு சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை இரட்டிப்பு செய்து பதிலடி கொடுத்தது.

இதனால் சீனாவின் தொலைத்தொடர்பு ஹூவாய் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா அவசர நிலை சட்டத்தை பிரகனப்படுத்தியது.

அமெரிக்காவுக்கு எதிராக ஹூவாய் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு.!

இதன் தொடர்ச்சியாக ஹூவாய் உள்ளிட்ட சீனா நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு கடும் கட்டுப்பாடு அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஹூவாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

 சீனா-அமெரிக்கா வர்த்தக போர்:

சீனா-அமெரிக்கா வர்த்தக போர்:

சீனா மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகின்றது. இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு சீனா-அமெரிக்கா-சீனா என்று விற்கப்படும் பொருட்களுக்கு வரியை அதிகமான வித்து வருகின்றன. சீனா-அமெரிக்காவால் மற்ற நாடுகளுக்கும் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சீனா பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை விதிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே வரியை உயர்த்தி இருந்தாலும், இந்த வரிவிதிப்பு அதிகமாகவே பார்க்கப்படுகின்றது.

ஹூவாய் போன் நிறுவனங்களுக்கு தடை:

ஹூவாய் போன் நிறுவனங்களுக்கு தடை:

ஹுவாய் நிறுவனம் செல்போன், அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றது. சீனா நிறுவனங்கள் அமெரிக்காவில் பல்வேறு தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன.

அந்நிய மற்றும் எதிரி நாடுகள் அமெரிக்காவின் தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தை அபகரிப்பதாக தெரிவித்த டிரம்ப் இதனைத் தடுக்க தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்வதாக அறிவித்துள்ளார்.

டிரம்பின் அவசர நிலை பிரகடனம் :

டிரம்பின் அவசர நிலை பிரகடனம் :

களவாடப்படும் தொழில்நுட்பத்தால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை பாதுகாக்க இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாகவும் அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா கருவிகளுக்கு தடை:

சீனா கருவிகளுக்கு தடை:

தகவல்தொடர்பு துறையில் முன்னணியில் இருக்கும் ஹுவாய் நிறுவனம், தனது கருவிகள் வாயிலாக சீன அரசுக்கு உளவு பார்ப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

ஆனால் அந்த குற்றச்சாட்டை ஹுவாய் நிறுவனம் மறுத்த போதிலும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹுவாய் நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் செய்யவும், அதன் தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தவும் தடை விதித்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது.

ஹூவாய் நிறுவனம் நடவடிக்கை:

ஹூவாய் நிறுவனம் நடவடிக்கை:

இந்த நிலையில் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக ஹுவேய் வழக்கு தொடர்ந்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் அந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.

இதில் ஹூவாய் நிறுவனத்திற்கு சாதமாக தீர்ப்பு வழங்குமா இல்லை அமெரிக்க அரசுக்கு சாதமாக தீர்ப்புவழங்குமா என்று நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Huawei calls on Washington to 'halt illegal action' against the company : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X