ஹெச்.ராஜா பேச்சு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எடிட்ங்-எஸ்விகேசர் பேட்டி.!
இதற்கு ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், எச்.ராஜாவின் பேச்சு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டில் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது எ
ஹெச்.ராஜாவின் நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குறிய பேச்சு பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக இணைய தளங்களில் பரவியது.

இதற்கு ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், எச்.ராஜாவின் பேச்சு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாட்டில் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது என்று எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையில் தற்போது புதிய சூறாவளியும் கிளம்பியுள்ளது.

சிவாஜி கணேசன் மணிமண்டபம்:
சென்னை அடையாரில் உள்ள மணிமண்டபத்தில் சிவாஜி கணேசன் உருவப்படத்துக்கு நடிகர் எஸ்விசேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

எஸ்வி சேகர் கருத்து:
ஓரிசனச் சேர்க்கை, கள்ள உறவு, அய்யப்பன் கோயிலில் பெண்களுக்கான அனுமதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு பரபரப்பபாக பேசபடுகிறது. மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடும் எந்த விசியமாக இருந்தாலும் அது நல்லதல்ல என்று எஸ்வி சேகர் கூறினார்.

ஆடியே டேப் எடிட்டிங்:
நீதிமன்றத்தையும், போலீசாரையும் அவமதித்தாக ஹெச்ராஜா பேசிய பேச்சு ஒரு வெர்சனில் இல்லை. இன்னொரு வெர்சனில் இருக்கின்றது. அந்த ஆடியோ டேப் வெளிநாட்டில் நவீன தொழில்நுட் வழியாக எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஹெச்.ராஜா பிச்னைக்கு தீர்வு:
இந்த பிரச்னையை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு தடவியல் துறைக்கு உள்ளது. தவிர இது எச் ராஜா பிரச்னை. அதை அவரே சரி செய்வார். என் மீதான வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கின்றேன் என எஸ்வி சேகர் கருத்து தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications