ஆன்லைனில் பான் கார்ட் விண்ணப்பம் மற்றும் திருத்தங்கள் நிகழ்த்துவது எப்படி?
ஆன்லைனில் மிக எளிமையாக பான் அட்டையை திருத்தம் செய்யமுடியும்.!
தற்போது பான் அட்டையில் உள்ள விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டும் என்றால் ஆன்லைனில் மிக எளிமையாக விண்ணப்பிக்கலாம். மிக எளிதில் பான் அட்டையை திருத்தம் செய்யமுடியும்.
இந்தியாவின் குடிமக்கள், புதிய பான் அட்டை ஒதுக்கீடு விண்ணப்பம் 49ஏ வடிவில் பெறப்படும். மேலும் வெளிநாட்டு குடிமக்களுக்கு, புதிய பான் அட்டை ஒதுக்கீடு விண்ணப்பம் 49ஏஏ வடிவத்தில் பெறப்படும்.

நிரந்தர கணக்கு எண்:
தந்போது இணையத்தளத்திற்கு சென்று மிக எளிமையில் பான் அட்டையில் திருத்தம் செய்யமுடியும். மேலும் பான் அட்டை நிரந்தர கணக்கு எண் செயல்படுத்தி மறுபதிப்பு செய்ய வேண்டுமென இணையத்தளத்தில் கோரினால், மிக எளிமையாக மாற்றங்கள் செய்யமுடியும்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வது எப்படி?
முதலில் ஆன்லைனில் விண்ணப்பத்தை பெறுவதற்க்கு என்எஸ்டிஎல் அல்லது யுடிஐடிஎஸ்எல் போர்ட்டைப் பயன்படுத்தி பெறமுடியும். மேலும் இந்தசேவைக்காக ரூ. 107 வரை கட்டணம் பெறப்படுகிறது. வெளிநாட்டு பயனர்களுக்கு ரூ.997 வரை சேவை வரி பெறப்படுகிறது.

கிரெடிட் கார்டு:
தற்போது இந்த சேவைவரி கட்டணத்தை செலுத்த கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு, மேலும் வரைவு வங்கி மூலம் விண்ணப்ப கட்டணம் மிக எளிமையாக செலுத்தலாம்.

தபால்:
விண்ணப்பக் கட்டணம் செலுத்திய பின்னர் ஆவணங்களை தபால் மூலமாக என்எஸ்டிஎல் அல்லது யுடிஐடிஎஸ்எல் அலுவலகத்திறக்கு அனுப்பவேண்டும். ஆவணங்கள் பெறப்பட்டவுடன் பான் விண்ணப்பம் என்எஸ்டிஎல் மற்றும் யுடிஐடிஎஸ்எல் மூலம் செயலாக்கப்படும்.

இந்தியாவின் குடிமக்கள்:
இந்தியாவின் குடிமக்கள் பொருத்தவரை புதிய பான் ஒதுக்கீடு விண்ணப்பம் 49ஏ வடிவில் பெறப்படும். வெளிநாட்டு குடிமக்களுக்கும் புதிய பான் ஒதுக்கீடு விண்ணப்பம் 49ஏஏ வடிவத்தில் பெறப்படும்.

விண்ணப்பத்தை எங்கே அனுப்புவது?
தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது, தகவல், முகவரி, மற்றும் சான்றுகளுடன்
என்எஸ்டிஎல் அலுவலகத்திற்க்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் கட்டணம் செலுத்துவது எப்படி?
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஆன்லைன் பரிவர்த்தனையை நிறைவேற்றும் போது கடன் அட்டை டெபிட் கார்டு அல்லது நிகர வங்கி போன்றவற்றில் இருந்து கட்டணம் செலுத்தமுடியும.


Click it and Unblock the Notifications